இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜமாகவே கற்பனை
செய்யப்பட்டது .மேலும் யார் மனதையும் புண்படுத்த அல்ல
சர்வபுரம் சர்வநிஷத்புரம் பூர்வஷ்ரூங்கபுரம் உத்தரஷ்ரூங்கபுரம் போன்ற 40 புரங்களை
உள்ளடக்கியது கவ்யஷ்ரூங்கம் எனும் ராஜ்ஜியம்.பூர்வஷ்ரூங்கத்தை
தனது தலைமையாக கொண்டு ஆட்சி செலுத்தி வந்தான் ஷ்ருங்கபூபதி எனும் அரசன்.மிகவும் வித்யாசமான
பேர்வழி . இந்த உலகில் அனைத்தும் அறிந்தவன் தான் மட்டுமே என்ற கர்வம் கொண்டிருந்தான்
ஆனால் அடிப்படையாக அவனுக்கு ஒன்றும் தெரியாது சாமானியர்களின் கஷ்டமும் தெரியாது ஏழ்மை
அறியாதவன்.அவனுக்கு மட்டுமே அனைவரும் அடிபணிய வேண்டும் என்று சர்வாதிகாரம் செலுத்தினான். நல்லவன் போல் நடிப்பதில் இவனுக்கு நிகர் இவனே. இவனுக்கு
கீழே சில சொம்புதூக்கிகள் இவனுக்கு சோம்பு தூக்கியே பிழைப்பு நடத்தினர் அதில் சிறந்த
அடிமையை தனக்கு பணியாளியாக வைத்திருந்தான். சோம்பு தூக்கா விட்டால் அவர்களை பணிநீக்கம் செய்து
தனது அதிகாரத்தை செலுத்தினான் இவனது ராஜ்ஜியத்தில்
மட்டும் இரண்டு சூரியன் உதிக்கும் ஒன்று கிழக்குவானில் மற்றொன்று அரசன் தலையில் இரண்டாவது
சூரியனுக்கு மட்டும் மறைவே கிடையாது அதனாலேயே அரண்மனையில் இவனுக்கு டக்ளூ என்று பெயர் வைத்திருந்தனர்.
தனக்கு எதிரில் யாரேனும் தலையில் முடியுடன் அவர்களை கேலி பேசுவான்
ஒருமுறை மன்னன் நகர்வலம் வரும்பொழுது பசு ஒன்று அமர்ந்திருப்பதை கண்டான். அங்கு அருகில்
சிற்றுண்டி ஒன்று இருந்தது. அந்த சிற்றுண்டியிலிருந்து 4 இட்லிகளை வாங்கி இவன் குனிந்து
பசுவுக்கு இட்லிகளை கொடுக்கும்பொழுது எதிரில் வந்த பால் வியாபாரி ஒருவன் அரசன் தலையிலிருந்து
வெளிப்பட்ட தேஜோமயான மின்னல் வெளிச்சத்தினால் தனது வண்டியை செலுத்த முடியாமல் வண்டியுடன்
குட்டையில் விழுந்தான் இதனால் நமது டக்ளு மஹாராஜா அந்த பால் வியாபாரிக்கு சிறை தண்டனை
வழங்கினார் . எதற்காக மன்னா அவனுக்கு தண்டனை அளித்தீரகள் மனிதனுக்கு
தலையில் வழுக்கை விழுவது சகஜம்தானே பகல்வேளையில் குனிந்து மாட்டிற்கு இட்லி அளித்தீர்கள்
உங்கள் தலையிலிருந்து வெளிப்பட்ட அற்புத ஜோதியின் ப்ரதிபிம்பத்தால் கண் கூச்சப்பட்டு
குட்டையில் விழுந்தான் அவனுக்கு ஆறுதல் சொல்லாமல் தண்டனை அலிய்த்துவிட்டீரகளே என்று
சிற்றுண்டி கடைக்காரன் எதிர்த்து கேர்ள்வி கேட்டான் அவ்வளுவுதான் முடிந்தது ஜோலி.கடையும்
காலி கடைகாரனும் காலி சிற்றுண்டி கடைக்காரன் சிறையில் அடைக்கப்பட்டான். நாட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்றும்
மீறி முடியை வளர்த்தால் அரசனுக்கு 100 வராகன் வரி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு
இட்டான். வரிக்கு பயந்த அனைவரும் மொட்டை அடித்து கொண்டு பளபளவென்று திரிந்தனர்.
அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு
தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம்
நிவாரணம் கேட்டான்.
தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச்
சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை
மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.
ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான்.
ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.
மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித்
தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான
இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம்
முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர்.
“வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.
நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும்
வழி தெரியவில்லை.
அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு
நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்”
என்று கூறினான்.
வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள்.
அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.
அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக்
கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.
அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும்
மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது
நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும்,
ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.
மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப்
போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.
அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால்,
அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.
முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப்
பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு
அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம்
என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.
அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து
அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய
பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப்
பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை
அகற்ற இயலவில்லை.
மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம்
கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.
ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின்
அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.
பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப்
பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான். பாவம் அரசனாக இருக்கிறான் தலையில் உள்ளும் ஒன்றும் இல்லை வெளியேயும் ஒன்றும்
இல்லை என்றால் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கும் .
சகோதர சகோதரிகளே நான் சொல்வதும் அதுவே தயவு செய்து நாம் பலரும் ஸர்வதாஉண்ணும்பொழுதும்
உறங்கும் பொழுதும் குரங்கை நினைத்து கொண்டே
இருக்கிறோம்.நாமும் குரங்கை நினைக்காமலிருப்பது நல்லது . உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
சபாபதியாரின் கதை பகுதியை ரசித்த அனைவருக்கும் நன்றி மீண்டும் ஒரு கற்பனை கதையுடன்
சிந்திப்போம் நன்றி வணக்கம்
No comments:
Post a Comment