Wednesday, November 24, 2021

 முன்னொரு காலத்தில் சோணகிரி  என்று ஒரு அழுகிய  சாம்ராஜ்ஜியம் இருந்தது.இந்த ராஜ்யத்தை மூக்ஷக தேவியார் என்ற அரசி ஆண்டு ஆட்டிப்படைத்து வந்தார் இவரது ஆட்சியில் திருட்டு பயம் என்பது கிடையாது ஏனென்றால் அரண்மனை வாசிகளே திருடி விடுவார்கள் சொல்லப்போனால் கொள்ளையர்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது .அரசி யாரை கண்டாலும் வஞ்சக எண்ணத்துடன்  சிரித்து சிரித்து பேசுவார் .அவர் அரண்மனை சென்ற பின்பு அரசியார் யாருடன் பேசினாரோ அவன் அடிமையாக்கபட்டிருப்பான். இந்த அரசியாரின் ராஜ்யத்தில்  நடிப்பிற்காகக்கூட சிரிக்க முடியாமல் அவதிப்படும் மக்களும் இருக்கத்தான் செய்தார்கள்.இந்த ராஜ்யத்தில் ஸ்ரீதேவி அரண்மனை வாசியாகவும் மூதேவி மக்களின் இல்லங்களிலும் வசித்து வந்தாள் இதனாலேயே மக்கள் நமது தேவியரை மூ தேவியார் என்று அன்போடு அழைத்தார்கள் நமது மூ தேவியாரின் திருவிளையாடல்களை தாங்க முடியாமல் சகித்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் .நாட்டை விட்டு ஓடியவராகள் ஏராளம் ஏராளம் விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஏராளமோ ஏராளம்  அரண்மனையில் சாதாரண வேலைகளுக்கு கூட ஆளில்லாமல் நல்லவர் யாரேனும் ஒருவரே பல வேலைகளை செய்வதாக இருந்தது இப்படித்தான் ஒருமுறை நமது தேவியார் நடந்து வந்துகொண்டு இருந்தார் தேவியார் அரசவைக்குள் நுழையும்பொழுது தேவியாரின் கண்களில் மிதியடி ஒன்று பட்டது மிதியடியை பார்த்த தேவியார் கொதித்து எழுந்தார் மிதியடிக்கு கீழே ஒரே ஒரு சிறுதுண்டு காகிதம் ஒன்று கண்ணில் பட்டது.மூதேவியின் கண்களுக்கு குப்பைகள்தானே தென்படும் முடிந்தது ஜோலி யார் இன்று அரசவையை சுத்தம் செய்த மடையன் என்று அனைவரின் முன்பும் அன்று சுத்தம்  செய்தவனை முழுவதுமாக சுத்தம் செய்தார் நமது மூ தேவியார் . இப்படி அரண்மனையில் பணிபுரியும் பணியாளர்களை பணிசெய்யவிடாமல் தடுப்பதும் ஏன் பணி செய்யவில்லை என்று பிறகு திட்டுவதும் தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார் மூ தேவியார் .இப்படி இருக்க நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தம்மை மூ தேவியார் என்று அன்போடு அழைக்கும் செய்தி அரசியாரின் காதுகளுக்கு எட்டியது.இதை உணர்ந்த மக்கள் எப்படியாவது உயிரை காப்பாற்றி  கொள்ள முடிவு செய்தார்கள் ஆனால் நமது தேவியார் இதை புதிய விதத்தில் கையாள நினைத்தார்.தமக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு அரசவையில் மந்திரி பதவியுடன் இரண்டு கிராமங்களை பரிசாக அளிப்பதாக கூறினார் ..........அரசியாருக்கு சிறிய விஷயத்தில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.சந்தேகம் என்னவென்றால் உண்மையிலேயே பெரியவள் ஸ்ரீதேவியா அல்லது மூதேவியா என்பது? இதற்கு தக்க பதிலளிப்பவர்கள் கௌரவிக்க படுவார் என்று தண்டோரா போட்டனர்.உயிருக்கு பயந்து ஒருவரும் முன்வரவில்லை ஆனால் நமது மூ தேவியார் சற்று வித்தியாசமானவர் தினமும் ஒரு குடும்பத்தை அழைத்து தனது ஸந்தேஹத்தி தீர்த்து வைக்க சொல்லியும் தண்டனை அளித்தும் அதிகாரம் செலுத்தினார் .ஒருவன் அகப்பட்டான் அவனிடம் கேள்வி கேட்டாள் நமது தேவியார்.உண்மையிலேயே பெரியவள் ஸ்ரீதேவியா அல்லது மூதேவியா? அவனோ நகைத்து நகைத்துப் பின்வருவதறியாமல் மூதேவிதான் நல்லவள் என்றான்.

காரணம் என்னவென்று  கேட்க , “ஸ்ரீதேவி .எங்கும் நிலயாதிருப்பதில்லை. அவள்  ஒருவனைச் ஸ்ரீமானாகவும், மற்றொருவனைப் பேதையாகவும் செய்கிறாள். மூதேவியானவள் அப்படியில்லை. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றிலும் வியாபகமாயிருக்கிறாள்” என்று சொல்லக்கேட்டு சினமுற்ற நமது தேவியார் அவனுக்கு  சிறைத்தண்டனை வழங்கினார். இப்படி ஒவ்வொரு குடும்பமாக பாதிக்க பட்டுக்கொண்டு இருந்தது.இந்த கொடுமையிலிருந்து மக்களை காப்பற்ற மந்திரி குமாரன் ஒருவன் தேவியாரிடம் ஒரு யோசனை சொன்னான் .தேவியாரே எனக்கு தெரிந்த அறிஞர் இருக்கிறார் பார்த்தால் சற்று இளித்தவாயன் போல் இருப்பார் ஆனால் அவர் ஏதோ விஷயம் தெரிந்தவர் என்று ஒப்பு கொள்ளலாம் அவரின் பெயர் சபாபதியார் அவரை அழைத்து உங்கள் சந்தேகத்தை காட்டல் என்ன? என்று சொல்லி தேவியாரை நன்றாக மாட்டிவிட்டான் .அதுவும் சரிதான் அவரை நாளை அரசவைக்கு வரவழையுங்கள் என்றார் தேவியார் .பொழுது விடிந்தது சபாபதியாரும் வந்தார் பார்ப்பதற்கு மந்திரி குமாரன் சொன்னது போல் இளித்தவாயன் கொஞ்சம் தொப்பை உயரம் நெற்றி நிறைய விபூதியுடன் காணப்பட்டார் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.உம்மை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் தக்கப்பதில் வழங்கி பரிசை பெற்று செல்லுங்கள் என்றார் மூ தேவியார் சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டாள் நமது தேவியார்.உண்மையிலேயே பெரியவள் ஸ்ரீதேவியா அல்லது மூதேவியா? சபாபதியாருக்கு  வாயில் வாஸ்து மிகவும் நன்றாக இருந்தது ,தேவியாரே  இவ்வுலகில் ஸ்ரீதேவியின் வருகையைப் பற்றி

 சந்தோஷிக்கிறார்கள்; மூதேவி போதலைப் பற்றிச் சந்தோஷிக்கிறார்கள், ஆகையால் இருவர் விஷயத்திலும் மக்களின்  சந்தோஷம் சமமே என்றார் சபாபதியார். நமது அகிலஉலக புத்திசாலி  தேவியாருக்கு சந்தோசம் .ஆனால் சபாபதியார் பிடித்தார் ஓட்டம் .....சகோதர சகோதரிகளே மூதேவி போதலை பற்றி சந்தோஷிக்கும் நாள்.....நமக்கு ஏன் மௌனமாய் இருத்தல் நன்று

Monday, November 22, 2021

 

யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம்கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார். 

இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர். 

“இது என்ன... கற்பாறை?” 

“ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’ 

“சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’’ 

''பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை'' என்றான் சித்ரகுப்தன்.

அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான்.  

தன் தவறை உணர்ந்தார், யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார். 

“யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே...’’ 

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா’ என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், `சிலாதர்’ ஆனார். 

எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது. 

 

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

 

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

 

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

 

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

 

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

 

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

 

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

 

நீதி : சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

 

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

 

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

 

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

 

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

 

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

 

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

 

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

 

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

 

நீதி : செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

Sunday, November 21, 2021

 

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜமாகவே கற்பனை செய்யப்பட்டது .மேலும் யார் மனதையும் புண்படுத்த அல்ல கதையின் பெயர் டக்ளூ பராக் பராக் 

சர்வபுரம் சர்வநிஷத்புரம் பூர்வஷ்ரூங்கபுரம் உத்தரஷ்ரூங்கபுரம் போன்ற 40 புரங்களை உள்ளடக்கியது கவ்யஷ்ரூங்கம்  எனும் ராஜ்ஜியம்.பூர்வஷ்ரூங்கத்தை தனது தலைமையாக கொண்டு ஆட்சி செலுத்தி வந்தான் ஷ்ருங்கபூபதி எனும் அரசன்.மிகவும் வித்யாசமான பேர்வழி . இந்த உலகில் அனைத்தும் அறிந்தவன் தான் மட்டுமே என்ற கர்வம் கொண்டிருந்தான் ஆனால் அடிப்படையாக அவனுக்கு ஒன்றும் தெரியாது சாமானியர்களின் கஷ்டமும் தெரியாது ஏழ்மை அறியாதவன்.அவனுக்கு மட்டுமே அனைவரும் அடிபணிய வேண்டும் என்று சர்வாதிகாரம் செலுத்தினான்.  நல்லவன் போல் நடிப்பதில் இவனுக்கு நிகர் இவனே. இவனுக்கு கீழே சில சொம்புதூக்கிகள் இவனுக்கு சோம்பு தூக்கியே பிழைப்பு நடத்தினர் அதில் சிறந்த அடிமையை தனக்கு பணியாளியாக வைத்திருந்தான். சோம்பு தூக்கா விட்டால் அவர்களை பணிநீக்கம் செய்து தனது அதிகாரத்தை செலுத்தினான்  இவனது ராஜ்ஜியத்தில் மட்டும் இரண்டு சூரியன் உதிக்கும் ஒன்று கிழக்குவானில் மற்றொன்று அரசன் தலையில் இரண்டாவது சூரியனுக்கு மட்டும் மறைவே கிடையாது அதனாலேயே அரண்மனையில் இவனுக்கு டக்ளூ என்று பெயர் வைத்திருந்தனர். தனக்கு எதிரில் யாரேனும் தலையில் முடியுடன் அவர்களை கேலி பேசுவான் ஒருமுறை மன்னன் நகர்வலம் வரும்பொழுது பசு ஒன்று அமர்ந்திருப்பதை கண்டான். அங்கு அருகில் சிற்றுண்டி ஒன்று இருந்தது. அந்த சிற்றுண்டியிலிருந்து 4 இட்லிகளை வாங்கி இவன் குனிந்து பசுவுக்கு இட்லிகளை கொடுக்கும்பொழுது எதிரில் வந்த பால் வியாபாரி ஒருவன் அரசன் தலையிலிருந்து வெளிப்பட்ட தேஜோமயான மின்னல் வெளிச்சத்தினால் தனது வண்டியை செலுத்த முடியாமல் வண்டியுடன் குட்டையில் விழுந்தான் இதனால் நமது டக்ளு மஹாராஜா அந்த பால் வியாபாரிக்கு சிறை தண்டனை வழங்கினார் . எதற்காக மன்னா அவனுக்கு தண்டனை அளித்தீரகள் மனிதனுக்கு தலையில் வழுக்கை விழுவது சகஜம்தானே பகல்வேளையில் குனிந்து மாட்டிற்கு இட்லி அளித்தீர்கள் உங்கள் தலையிலிருந்து வெளிப்பட்ட அற்புத ஜோதியின் ப்ரதிபிம்பத்தால் கண் கூச்சப்பட்டு குட்டையில் விழுந்தான் அவனுக்கு ஆறுதல் சொல்லாமல் தண்டனை அலிய்த்துவிட்டீரகளே என்று சிற்றுண்டி கடைக்காரன் எதிர்த்து கேர்ள்வி கேட்டான் அவ்வளுவுதான் முடிந்தது ஜோலி.கடையும் காலி கடைகாரனும் காலி சிற்றுண்டி கடைக்காரன் சிறையில் அடைக்கப்பட்டான். நாட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்றும் மீறி முடியை வளர்த்தால் அரசனுக்கு 100 வராகன் வரி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு இட்டான். வரிக்கு பயந்த அனைவரும் மொட்டை  அடித்து கொண்டு பளபளவென்று திரிந்தனர்.

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான். பாவம் அரசனாக இருக்கிறான் தலையில் உள்ளும் ஒன்றும் இல்லை வெளியேயும் ஒன்றும் இல்லை என்றால் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கும் .

சகோதர சகோதரிகளே நான் சொல்வதும் அதுவே தயவு செய்து நாம் பலரும் ஸர்வதாஉண்ணும்பொழுதும் உறங்கும் பொழுதும்  குரங்கை நினைத்து கொண்டே இருக்கிறோம்.நாமும் குரங்கை நினைக்காமலிருப்பது நல்லது . உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

சபாபதியாரின் கதை பகுதியை ரசித்த அனைவருக்கும் நன்றி மீண்டும் ஒரு கற்பனை கதையுடன் சிந்திப்போம் நன்றி வணக்கம்

Saturday, November 20, 2021

 ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.

அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.*
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்...

 மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.

மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.
'முடிந்தவியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.
எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதைமன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில்விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.
அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில்மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது'.
இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மஹாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.
நீதி: யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்...

 எச்சரிக்கை ...

பயந்த சுபாவம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம்....
மேற்குத்தொடர்ச்சி மலையின்
அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்...
தென்னந்தோப்புகளும்
பாக்கு தோட்டங்களும்,
ரப்பர் தோட்டங்களும்
நிறைந்தபகுதி அது!
நிலத்தை ஒட்டிய பகுதியில்
வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம்
வாழ்ந்துகொண்டு இருந்தது!
நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி,
அவர்களுக்கு பத்து வயதில்
ஒரு பெண் குழந்தை!
ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த
பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக
தென்னந்தோப்புக்கு செல்கிறாள்!
அவள் புல் அறுத்துக்கொண்டு
இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம்
கொஞ்சமாக கேட்கிறது!
அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது!
திரும்பவும் மீண்டும் ஒரு முறை
அதே அழுகுரல் கேட்கிறது!
பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்!
ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்!
தென்னை மரத்தில் ஏதாவது
குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்!
எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!
ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்!
பயந்து போய் தன்னுடைய
கணவனுக்கு சொல்கிறாள்!
அவன் முதலில் ஏதாவது
உன்னுடைய பிரம்மையாக இருக்கும்என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்
இருக்கிறான்!
அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது,
இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல்
கேட்கிறது!
அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்!
கையில் பெரிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள்
நுழைகிறான்!
அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்!
ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும் அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட வன் என்பதாலும் தைரிய மாக தோப்புக்குள் செல்கிறான்!
அவளும் கணவனுக்கு ஏதாவது
ஆகிடுமோ என்று பயந்து
பின்னாலேயே போகிறாள்!
அவளுக்கு கேட்ட அதே அழு குரல்அதே தென்னை மரத்தி லிருந்து கேட்கிறது!
அவன் கீழிருந்தபடி உயரமான
அந்த தென்னை மரத்தில்
டார்ச் அடித்து பார்க்கிறான்!
அந்த மரத்தில் இருந்து
ஏதோ ஒரு பறவை மட்டுமே
பறந்து செல்கிறது!
அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்தஅழுகை குரல் இப்போது கேட்க வில்லை!
போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார் கள்!
அடுத்த நாள் அவளுடைய
அண்ணனுக்கு இந்த தகவலை
சொல்கிறாள்!
மீண்டும் அழுகுரல் வந்தால்
எனக்கு போன் செய்யுங்கள்
நான் ஆட்களோடு வந்து
பார்க்கி
றேன் என்று சொல்கிறான்!
அவள் அந்த அழுகுரலுக்கு
பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்!
அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!
அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்!அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்!
அங்கே இருக்கும் சில மரக் கட்டை களில் துணியை
இறுக்கமாக சுற்றிக்கொண்டு
அவற்றின் மீது மண்ணெண் ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு அந்த தென்னந் தோப்பிற்கு கிளம்புகிறார் கள்!
வீட்டில் இருக்கும்போது
குறை வாக கேட்கின்ற அந்த
அழுகை சத்தம் அருகேசெல்லச் செல்ல அதிகமாககேட்கிறது!
பின் கொஞ்ச நேரத்திற்கெல் லாம் முழுவதும் நின்றுவிடுகி றது!
அந்த குறிப்பிட்ட மரத்தின்
அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டிமேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்!
எதுவுமே தெரியவில்லை!
அழுகுரலும் நின்றுவிட்டது!
தீயை பார்த்தால் எந்த பேயாக
இருந்தாலும் பயந்துவிடும் என்றுகூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!
அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க
ஆரம்பிக்கிறது!
எல்லோருமே பயந்துவிடு கிறார்கள்!அந்த இடத்தை விட்டு
உடனேஓடிவந்துவிடுகிறார்கள்!
அடுத்த நாள் ஒரு பெரிய
சாமி யாரை அழைத்துவந்து
அந்த தென்னை மரத்தை சுற்றி
மஞ்சள் கயிறால் கட்டு கட்டி,
ஒரு தென்னங்கன்றுக்கு
பாலாபிஷேகம் செய்து
நிறைய சடங்குகள் எல்லாம்
செய்து, பூஜைகள் எல்லாம்
செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம்அந்த அழுகுரல் கேட்காது என்றுசொல்லி விட்டு போகிறார்!
அவர்களும் நிம்மதியாக
தூங்குகிறார்கள்!
ஆனால் அடுத்த நாள் விடியற் காலையிலேயே அந்த அழு குரல்கேட்க ஆரம்பிக்கிறது!
இந்த முறை தொடர்ந்து
கேட்டுக்கொண்டே இருக்கிறது!
இடைவெளி இல்லாமல்
திரும்ப திரும்ப கேட்கிறது!
தோப்பின் பக்கம் யாரோ
ஆள் நடமாட்டம் இருப்பது போல்அவர்களுக்கு தெரிய
பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக,
கொஞ்சம் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்,
அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்
இருப்பது போல் தெரிகிறது!
தென்னை ஓலைகளும் மட்டையும்அசைகின்ற சத்தம் கேட்கிறது!
திடீரென்று மரத்திலிருந்து
ஒரு உருவம் சரசரவென இறங்கிகீழே வருகிறது!
இவர்கள் நடுங்கிப்போய் பார்க்க ....
மரத்திலிருந்து இறங்கிய மரமேறி,
ஒண்ணும் இல்லம்மா
நாலு நாள் முன்னாடி தேங்காய்
பறிக்க ஏறும்போது போனை
மேலயே விட்டுட்டு வந்துட்டிருக் கேன், எங்கடா காணோம் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன்,
ஒவ்வொரு தோப்பா போயி
ஊரெல்லாம் போன் பண்ணி
போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்!
கடைசியில உங்க தோப்புலயே
இருந்திருக்கு!
என்று அவன் சந்தோஷப்பட
அதற்குள் மீண்டும் அந்த
அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க
அதை அட்டென்டு செய்து
போனு கிடைச்சிடுச்சிம்மா,
கடைசியில நம்ம துர்கா அக்கா
தோட்டத்துல தான் இருந்தி ருக்கு,
போனை பார்த்த பின்னாடி தான்எனக்கு உயிரே வந்திருக்கு,
என்று அவன் பேசியபடி
நடந்துசெல்ல ..

மாலை சரியாக 5.30 மணி, சீராளா ரயில் நிலையம்.ரயிலை விட்டு இறங்கி வெளியில் வந்து  இன்குல்லு எனும் ஊருக்கு செல்ல பேருந்திருக்காக காத்திருந்தான் ராஜபாதூர் -பெயர்   மட்டுமே கம்பீரமானது. ஆனால் அவன் பார்பதற்கு உடைந்து விழுவது போல் இருப்பான்.யாராவது சற்று குரலை உயர்த்தி அழைத்தால் பயந்துவிடுவான்.எதிர்பார்த்த நேரத்திற்கு பேருந்து வந்தது. பேருந்து இவனை விட சற்று மோசமாகவே இருந்தது.நடத்துனர் கீழே இறங்கி சோமவேலி, கொங்குபில்லா,நாநவிலா,இன்குல்லு, என்றார்.ராஜபாதூர்  பேருந்தில் ஏறி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து அமர்ந்தான்.நடத்துனர் மெதுவாக பேருந்தில் ஏறி எத்தனை தலைகள்  என்று பார்த்து கொண்டார்.மொத்தமாக 15 பேர் இருந்தாரக்ள்.

மாலை இருள் சூழும் வேலை .சரி போலாம் என்று போகலாம் என்று தோன்றவே பண்டி வெள்ளொச்சு என்றார் நடத்துனர் ஓட்டுனரும் சரி என்று வண்டியை எடுத்து நகர்த்தி சென்றார்.ஒவ்வொருவராக பயணசீட்டு வாங்கினார்கள் .இவன் இடத்திற்கு நடத்துனர் வந்த உடன்   இன்குல்லு என்றான் ராஜ்பாதுர் நடத்துனர் இவனை மேலும் கீழும் பார்த்தார் இவனுக்கு சற்றே நடுங்கியது, பயணசீட்டு தரும் முன்பு இன்குல்லுதாக பண்டி வெள்ளது ( இன்குல்லு வரை வண்டி செல்லாது )  (நுவ்வு திகி நடிசி வெள்ளாலி …எமண்டாவு )நீ இறங்கி சற்று நடந்து செல்ல வேண்டும் என்ன சொல்கிறாய் என்றார் நடத்துனர். இவனுக்கு தெலுகு பாஷை பேசவராதே தவிர புரிந்துகொள்வான்.சரி என்று தலையை அசைத்தான்.பயணசீட்டு அளித்த பின்னர் அவனை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தார் நடத்துனர்.பின்பு இவன் கவனித்தான் இவன் அந்த கிராமத்தின் பெயர் சொன்ன பின்பு பேருந்தில் உள்ள அனைவரும் இவனையே பார்த்தனர். ஏற்கனவே நாம்தான் பெரிய தைர்யசாலி ஆயிற்றே.இதற்கு பின் கேட்க வேண்டுமா ?  

ஒவ்வொரு ஊராக கடந்து சென்றது மெல்ல இருள் சூழ்ந்தது.மெதுவாக நாநவிலா வந்தது .நடத்துனர் ராஜ்பாதுர் அருகில் வந்து (நீ ஊரு வஸ்துன்னதி  சிதம்கா உண்டு) .உன் ஊர் வருகிறது தயாராக இருக்கவும் என்று  சொல்லிவிட்டு அவனை ஒருமுறை மேலும்கீழும் பார்த்து சென்றார் இவனுக்கு என்னவென்று புரியவில்லை அவசரப்பட்டு நாம போகக்கூடாத ஊருக்கு செல்கிறோமோ என்று இவனுக்கு  சந்தேகம் வந்தது .மெதுவாக வியர்க்க தொடங்கியது அடிவயிற்றில் பயம் மெதுவாக பீடிப்பதை உணர்ந்தான் ராஜபாதுர் அவசரப்பட்டுவிட்டாய் என்று அவன் குரல் அவனுக்கே கேட்டது. இன்குல்லு என்று நடத்துனர் மிகவும் உரக்க சொன்னான். இவனுக்கு ஆவியே இல்லை. பேருந்திலிருந்து இறங்கும் முன் இன் குல்லு என்று முதன்முறையாக வாயை திறந்து நடத்துனரிடம் கேட்டான் நடத்துனர் கையை காண்பித்தார் அதிகோ அட்டு வெள்ளு அதோ அந்த வழியில் செல் என்றார் நடத்துனர் .

பேருந்திலிருந்து இறங்கினான் அவன் தனது தோளில் ஒரு தோல் பையை மாட்டியிருந்தான் அவ்வளவுதான் அவன் இறங்கியபொழுது  மணி சரியாக 6.45 ஆகியிருந்தது .அவன் சுற்றிலும் பார்த்தான் கோட்டானின் அலறல் நரியின் ஊளை ஒன்றும் கேட்கவில்லை மயானஅமைதியாக இருந்தது உரத்த குரலில் கூப்பிட்டால் யாரேனும் வருவார்களா  என்று யோசித்தான் ராஜ் பாதூர் உன் வாழ்க்கையில்;இழைத்த மிகப்பெரிய தவறு இது ஆள் நடமாட்டம் இல்லை. நண்பர்கள் அழைத்த போது சென்றிருநதால் இப்படி தனியாக மாட்டிக்கொண்டிருக்க வேண்டாம் போகும் வழி என்னமோ ஏதோ பேருந்தில் ஒருவர் பார்வையும் சரியாக இல்லை அவனுக்கு இருந்த ஒரே ஒரு ஆறுதல் நிலவு வெளிச்சம் மட்டுமே.அவனிடம் கைபேசிக்கூட கிடையாது அகப்பட்டு கொண்டாய் ராஜ்பாதுர்  தப்பவே  முடியாது.என்று தான் நின்ற இடத்தில் இருந்தே யோசித்தான் ....

அவன் செல்லும் வழியை சற்றே பார்த்தான் சுற்றிலும் ராக்ஷ்ச புற்கள் வழி ஆளரவம் கிடையாது கைகள் மெதுவாக ஜில்லிட்டு போனது. அப்படிப்பட்ட மாலை பொழுதிலும்  பயத்தில் வியர்வையால் நனைந்துவிட்டது மெல்ல  அடி மேல் அடி வைத்து தனது பயணத்தை துவங்கினான் ராஜ்பாதுர். ஒரு 25 அடி நடந்திருப்பான்  வழியில் அவனை தவிர வேறு யாரும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை நிலவு வெளிச்சத்தில் மெதுவாக நடந்தான் சற்று தூரம் சென்ற பின்பு யாரோ அவனை பின்தொடர்வது போல் இருந்தது யாராக இருக்கும் ஒருவேளை .....இரத்தக்காட்டேரியோ என்று நினைத்து சட்டென்று திரும்பிட அங்கு யாரும் இல்லை  மீண்டும் தனது பயணத்தை துவங்கினான் இப்பொழுது அவனை யாரோ பின்தொடருகிறார்கள் என்று நன்றாக உணரமுடிந்தது சுற்றி இருக்கும் ராக்ஷ்ச புற்கள் லேசாக அசைய துவங்கின.   இவன் மெதுவாக திரும்பி பார்த்தான். புகை மண்டலமாக காட்சி அளித்தது இவன் மனதிற்குள் வேறு ஒரு கேள்வி ஒருவேளை  அது அது அது முன்னே வந்து நின்றுவிட்டதோ அவசர பட்டு பின்னால் திரும்பி பார்த்தேனே யாரென்று பின்னால் பார்த்தவன் முன்னால் திரும்பி பார்க்க பயந்து கொண்டு கண்களை இருக்க மூடி கொண்டு மெதுவாக திரும்பி தனது கண்களை மெல்ல திறந்து முன்னே  பார்த்தான். 

அவனது ஜீவன் அவனிடம் இல்லை தூரத்தில் ஓர் உருவம்  அந்தரத்தில் தொங்கியபடி  இருபுறமும் கைகள் நன்றாக விரித்துக்கொண்டும் இருந்த ஓர் கோரமான காட்சியை கண்டான்.அவனுக்கு பயத்தில்  பற்கள் கூச துவங்கியது அவனால் அழ முடியவில்லை யாராவது இருக்கீங்களா என்று கேட்க முடியவில்லை    கத்தி பேசினால் எங்கு அந்த உருவம் அருகில் வந்து விடுமோ என்று பயந்தான் நடக்க கால்கள் முன் வரவில்ல்லை பின்னேயும் செல்லவில்லை நிற்கவும் முடியவில்லை  லேசாக தனது கால்களை முன்னே நகர்த்தி முன்னே செல்ல முயற்சித்து நகர துவங்கினான் இவன் மெதுவாக முன்னே செல்ல அந்த உருவம் மெல்ல அந்தரத்தில் அசைந்தது. நன்றாக இருள் சூழ்ந்து விட்டது மெதுவாக முன்னேற முன்னேற உருவத்தை இவன் நெருங்குகிறானா அல்லது உருவம் இவனை நெருங்குகிறதா என்று தெரியவில்லை  அவன் பெரிய தவறு செய்துவிட்டதாகவே நினைத்தான் முன்னே செல்ல செல்ல உருவத்தை நெருங்கி முழுவதுமாக கண்டான் அகலவிரிந்த கண்கள் வாய் நன்றாக திறந்து இருந்தது கருத்த உருவம் இருக்கைகள் இருபுறமும் அகல உரித்துக்கொண்டு கண்முன் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டான் . இதே இடத்தில் நின்றிருந்தால் அடித்து கொன்றுவிடும் ஓடினால் வந்து பிடித்துகொள்ளும் உடம்பு உறைந்து போயிருந்தது ரத்த ஓட்டம் நின்றேவிட்டது  என் செய்வது என்று தெரியாமல் சட்டென்று ஓடி பத்து அடி தள்ளி நின்றான். 

பின்னால் திரும்புவோமா வேண்டாமா திரும்பி பார்க்கலாம் என்று பார்த்தான். அந்த உருவத்திற்கு கொஞ்சம் தள்ளி ஒரு குள்ளமாக ஏதோ ஒன்று நகர்ந்து வந்தது அருகில் வரவே அது ஒரு பழுத்த முதியவர் என்று தெரிந்தது கையில் ஒரு விளக்கு வைத்திருந்தார்.இவனை கண்டதும் தன கையில் இருக்கும் ஒரு சிறிய துணி மூட்டையில் வெல்ல உருண்டைகள் சில வைத்திருந்தார் அதில் சில வெல்லங்களை  அவனுக்கு அளித்து எங்க போகணும் யார் நீங்க என்று கேட்டார் அவன் மெதுவாக வாயை திறந்து ஐயா என்னை அந்த பேயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்றான் ராஜ்பாதுர் அந்த முதியவர் நீ எங்க போகணும் என்று கேட்டார் முதியவர்  இன்குல்லு என்றான் இவன் நீ போகிற ஊருக்கு வழிய அந்த பேய்கிட்ட கேட்கலாம் வா என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றார் அந்த முதியவர் வரமாட்டேன் விடுங்க விடுங்க என்று கதறினான் முதியவர்  விடவில்லை 

அந்த உருவத்திடம் அழைத்து சென்றார் அவன் போகிற ஊருக்கு வழியை காண்பித்தார் இங்கு பார் என்றார் முதியவர் பின்புதான் தெரிந்தது அது பேயில்லை வழிக்காட்டி பொம்மை . இன்குல்லு என்று தெலுகுமற்றும் தமிழில் எழுத பட்டிருந்தது வழி காண்பித்த முதியவருக்கு நன்றி தெரிவித்து அவர் பின்னாலேய சென்று பத்திரமாக கிராமத்தை அடைந்தான் 

சகோதர சகோதரிகளே 

பேய்கள் வழிகாட்டும் சமூகத்தில் இருக்கும் நமக்கு  உண்மையான வழிகாட்டிகள் பேயாகத்தான் தெரிவார்கள்   சரிதானே இதற்கு மேலும் நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டாம்  .  

 

இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல வாங்க கதையை பார்ப்போம் கதையின் பெயர் ஞானவாபி

சுட்டக்குழி என்ற ஊரில் ஜெயன் என்று ஒருவன் இருந்தான் அந்த ஊரில் இருக்கும் அனைவரும் இவனை ஞானவாபி என்று அழைத்தனர்.ஞானவாபி என்றால் அறிவுகிணறு என்று பொருள்.ஆனால் அறிவிற்கும் இவனுக்கும் சம்பந்தம் கிடையாது.முன்கோபி, பேராசைக்காரன், தனக்கு வேண்டும் என்றால் அவனது வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும். ஆனால் காய்ச்சி வடிகட்டப்பட்ட அக்மார்க் முட்டாள். இவன் ஒரு வியாபாரி தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது இவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை இவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு இவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது.

மாடு சொன்னதை கவனமாக கேட்ட ஞானவாபி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று ஞானவாபியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு ஞானவாபி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன்.

அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.
புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் ஞானவாபியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது.

இப்போது ஞானவாபி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான்.

கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு ஞானவாபி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை.

நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று ஞானவாபியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த ஞானவாபி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. ஞானவாபி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

ஞானவாபி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது.

அதை கேட்ட ஞானவாபி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன்.

இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

சகோதர சகோதரிகளே

நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...