Saturday, December 25, 2021

 

அபராஜிதா-part-5

திடீரென்று கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் "சுவதனா"

கதவை திறந்து பார்த்தாள் .கடும்கோபமுடன் அவளது அம்மா சாமியாடி கொண்டிருந்தாள். “ஏண்டி எருமமாடே” எவ்வளவு நேரம்டீ…. தூங்குவ. பொண்ணா லக்ஷணமா விடியகாலைல எழுந்துண்டோம்  ,கோலம் போட்டு , ஆத்து  வேலை பார்த்தோம்னு இருக்கா! என்று  தனது வாயில் வந்த வார்த்தைகள் அனைத்தையும் வைத்து கிட்டத்தட்ட ஒரு  லக்ஷார்சனையே நடந்துகொண்டிருந்தது.

 ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ என்று நினைத்து கொண்டே கடிகாரத்தை பார்த்தாள் சுவதனா. நேரத்தை கவனிக்கும் முன்பே அவளது தாயார் மணி 11.30 ஆகுது முண்டம் நேரத்தை பாக்காத போய் ஸ்நானம் பன்னு  என்ன பொண்ணோ என்று சொல்லிக்கொண்டே துண்டை அவள் முகத்தில் தூக்கி எறிந்தாள்.

சுவதனா துண்டை எடுத்துக்கொண்டு முந்தைய இரவு நடந்த அனைத்தையும் நினைத்து கொண்டே குளிக்க சென்றாள் .பின்புதான் அவளுக்கு தெரிந்தது சபாபதியாரால் எழுதப்பட்ட அபராஜிதா கதை படித்து கொண்டிருந்தோம் என்று .”வராளனுக்கு, அபராஜிதாவுக்கு என்ன ஆனது என்று யோசித்தவாறு குளித்து விட்டு தலை ஈரத்துடன்….. ஹச்….. என்று ஒரு தும்மல் தும்மிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள் .

சரிதான் போஜனம் பன்ன வேண்டிய சமயத்திலே அல்பாஹாரம் சாப்டு. உடம்பு என்னத்துக்கு ஆகும் என்று மீண்டும் லக்ஷார்சனையை தொடங்கினாள்.

ஏய் வாய மூடமாட்ட என்று அதட்டி கொண்டே வந்தார் சுவதனாவின் தந்தை .

ஆமாம். பெரிய இவருமாதிரி என் வாய மூடுங்கோ. இவளை ஒரு வார்த்தை கேட்கறேளோ.

அவ என்னடான்னா அவ இஷடத்துக்கு இருக்கா.

 

சீ நோர் முய் என் பொண்ணுக்கு என்னடீ.... மஹாராணி அவ. நல்ல படிச்சிருக்கா  விஷாகப்பட்டணம் யூனிவெர்சிட்டிலோ ஆர்கியாலகி ஹையர் டிக்ரீ 

முடிச்சிருக்கா டீ .உன்னை மாதிரி பழைய பத்தாங்கிளாஸ் கிடையாது

 ஆமாம் இவள் படிச்ச டிக்ரீ நிறைய இடத்துல இன்னிக்கு கிடையவே கிடையாது. எவன் வேலை குடுப்பான்.ஒரு பொண்ண பெத்தவரா பேசறேளோ அவளுக்கு வயசு 26 ஆகறது ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்னு இருக்கா.நேத்து கூட ரெண்டு ஜாதகம் வந்தது நான் பார்த்துட்டேன் ஸமானகோத்ரம்   இல்ல  .பையன் ஸாமவேதி திருப்பதிலோ ஸ்கேல் பாராயணாலோ உன்னாடு. நல்ல குடும்பம் தாடிபத்ரிதான் அவங்க சொந்த ஊரு தெரியுமோ!. இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த சுவதனா சட்டென்று எழுந்து அம்மா சாலு காஸ்த ஆகு ( அம்மா போதும் கொஞ்சம் நிறுத்து ) நீ பாக்கிற பையனையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனால் இப்போ இல்ல போதுமா. என் ப்ராஜெக்ட் இன்னும் ஒருவருஷத்துல முடிஞ்சிடும். அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன் சாலா ..நாகு இங்கேம் ஒத்து  நான் கிளம்பறேன்.

 

 வெள்ளவே எலுகுபண்டி……… என்றாள் அவள் அம்மா

ஏய் சீ.. ஆட பிட்டணி(பெண்குழந்தைய)  எப்படி பேசணும்னு தெரியாது.போதும் நிறுத்தும்மா என்றார் சுவதனாவின் தந்தை

 

சுவதனாவின் தாய் தந்தையர் இருவரும் மிகவும் நல்லவர்கள். சிறந்த ப்ராஹ்மண தம்பதிகள் தந்தையார் ஆசாரஷீலர் தாயாரும் ஆசாரமானவள். இவர்கள் இருவர் மற்றும் சுவதனா இவ்வளவுதான் மொத்தக்குடும்பமே.சுவதனாவின் தாய் படபடவென்று பேசுவாளே தவிர மிகவும் பயந்தவள். தந்தை ஒய்வு பெற்ற கேந்த்ரிய வித்யாலயா பள்ளியின் சமூகஅறிவியல் ஆசிரியர் .சமூக அறிவியல் நாட்டத்தினால்  சுவதனாவிற்கு ஆர்கியாலஜி படிக்க வேண்டும் என்று ஆசை .

  அம்மாடி போஜனம் பன்னிட்டு போலாமே! உங்க அம்மா எப்பவுமே இப்படித்தான்.

இல்லப்பா லைப்ரரிக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன்.போறவழியில சரவணபவன்ல சாப்பட்றேன்.

பையன் திருப்பதிலோ உன்னாடு ஞாபகம் இருக்கட்டும்டீ…….. என்றாள் உள்ளிருந்து அவள் அம்மா

உடனே சுவதனாவின் தந்தையார் நல்லதுமா இன்னைக்கு நல்ல சாப்பாடா சாப்பட்றேன்னு சொல்ற. உங்க அம்மா சமையலேந்து தப்பிச்ச. என் தலையெழுத்து. நீ கிளம்பும்மா இந்தா கை செலவுக்கு வெச்சுக்கோ என்று தன்னிடம் இருந்த இரண்டு 500 ரூபா தாளை எடுத்து கொடுத்தார்.சிரித்துக்கொண்டே ஒரே ஒரு 500 ரூபாய் தாளை வாங்கி பர்சில் வைத்து  வண்டியை எடுத்துக்கொண்டு சென்றாள் சுவதனா…..

 

செல்லும் வழியில் சுவதனாவிற்கு “அபராஜிதாவின்” நினைவாகவே இருந்தது .அபராஜிதா வுக்கு  என்ன ஆனது வராளன் யாரை பார்த்து பயந்திருப்பான். கழுகின் கூடுகள் நிஜமான ஒளஷதங்களா? சிம்ஹேந்த்ரன் எதற்காக அபராஜிதாவை காப்பாற்ற வேண்டும்? பவ்யன் இறந்தது உண்மைதானா எல்லாம் சரி தொல்லியல் பட்டபடிப்பிற்கும் அபராஜிதாவின் கதைக்கும் என்ன சம்பத்தம். ஆராய்ச்சி என்ற பெயரில்  அபராஜிதாவின் கதையை பேராசிரியர் எதற்காக என்னிடம் கொடுத்தார் என்று பல கேள்விகளுடன் வண்டியை செலுத்திக்கொண்டே சரவணபவன் வாசலில் ஒரு நிமிடம் நின்றாள் ....அம்மாவின் குரல் (பையன் சாமவேதம் அத்யயனம் பண்ணிருக்கான். திருப்பதிலோ ஸ்கேல் பாராயணத்திலே இருக்கான்) நாம் இனி வெளியில் சாப்பிடுவதை நிறுத்தி கொள்வோமே என்று அவள் மனதில் நினைத்து கொண்டாள். நேராக வண்டி ஒரு பழைய சந்துக்குள் செல்ல   நூலகம் சுவதனாவை அன்புடன் வரவேற்றது. பழைய கட்டிடம் அப்படி ஒரு நூலகம் சென்னையில் இருப்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்

 

 ஒரு 80வயது மதிக்கத்தக்க முதியவர்.வா பாப்பா ....புஸ்தகம் வேணுமா இல்ல திருப்பி தரீங்களா

 

ரெண்டுமேதான் தாத்தா…இந்த புஸ்தகம் நாலு நாளைக்கு முன்னால அங்கிட்டு போனேன் .இது திருப்பி குடுக்கணும் அப்பறம் அபராஜிதா அடுத்த பாகம் வேணும் .

 

அபராஜிதாவா சரிதான் பைத்தியந்தான் புடிக்கல எனக்கு . அந்த பாழா போன கதையோட புஸ்தகத்தை கேட்டு காலைலேந்து 18 பேர் வந்து கேட்டு போய்ட்டாங்க அதுல ரெண்டு பேர் ஆர்கியாலஜி டிபாட்மென்ட் .

அந்த புஸ்தகத்தை ஏன் தேடணும் என்றாள் சுவதனா

 

அந்த முதியவரோ என்ன கேட்டா?  எனக்கு என்ன   ஜோசியமா தெரியும்.

 

சரி தாத்தா இந்த புஸ்தகத்தை நான் திருப்பி கொடுக்கிறேன் என்று அபராஜிதா புஸ்தகத்தில் முதல் நான்கு பாகங்களை திருப்பி கொடுத்து அங்கு இருக்கும் பதிவுப்புத்தகத்தில்  கையெழுத்து இட்டாள் .அவளது பெயரை கவனித்த அந்த நூலகத்தின் அதிகாரியான கிழவர்

 

யம்மாடி……… உன் பெயர்தான் சுவதனாவா

 

ஆமாம் தாத்தா! ஏன் கேட்கறீங்க?

 

 இல்லம்மா நேத்து சாயங்காலம் நூலகம் மூடப்போகின்ற சமயத்தில் யாரோ வந்து உன்னைப்பத்தி விசாரிச்சாங்க. உன்னோட போன் நம்பர் எல்லாம் வாங்கிக்கிட்டாரு. அவரு பெரு கூட……….. எதோ ஒரு ஹிந்தி பேரு………….. ஞாபகம் வந்திருச்சு அவரு பேரு ஜெயதேவ் ஓஜா……. அவருதான் உன்னைப்பத்தி விசாரிச்சாரு.

 

சுவதனாவின் முகத்தில் ஏனோ ஒரு குழப்ப ரேகை. யார் இந்த ஜெயதேவ் ஓஜா! என்று சிலை போன்று நின்றபடி யோசித்தாள்.

 

 யம்மாடி உன்கிட்ட தாமா பேசறேன் என்ன ஆச்சு என்றார் முதியவர்.

 ஒன்னும் இல்ல தாத்தா அந்த புஸ்தகத்துல அப்படி என்ன இருக்குன்னு யோசிக்கிறேன். இப்போ அதோட அடுத்த பாகம் கிடைக்காதா என்றாள் சுவதனா .

 

ரெண்டு பெருகிட்ட கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு…. ஒன்னு எழுதின அந்த சபாபதியார்கிட்ட கேட்கணும். ரெண்டு க்ராங்கனூர் ஹரிகேஷவன் நம்பூத்ரி கிட்ட கேட்டால் ஏதாவது விவரம் தெரியலாம் என்றார் முதியவர்.

 

சரி தாத்தா இவங்க விலாசம் இருக்கா

 

இருக்கும்மா…. இதோ இரு…… என்று சொல்லிவிட்டு ஒரு பழைய நோட் ஒன்று எடுத்து சபாபதியாரின் விலாசத்தையும், நம்பூத்ரியின் விலாசத்தையும் கொடுத்தார் அந்த முதியவர் வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்து சென்றாள்.

 

அவள் வண்டிக்கு வந்த பின்பு சீ…… அந்த தாத்தாவுக்கு ஒரு காபி குடிக்க கூட காசு கொடுக்கலையே என்று நினைத்தவாரு தனது பர்சில் இருக்கும் 50 ரூபாய் ஒன்றை எடுத்து கொண்டு நூலகத்தில் நுழைந்தாள் சுவதனா…… அங்கே .............................................அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார் ....சுவதனாவின் கதி ......................

.தொடரும்   

 

Thursday, December 23, 2021

 

சபாபதியாரின் கதைப்பகுதிக்கு வருக வருகவே இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல வாங்க கதையை பார்ப்போம்.கதையின் பெயர் சாம்பார் 

மல்லேஷப்பட்டினம்  என்னும் ஊரில், சாம்பார் சக்கட்டி என்பவன்வாழ்ந்து வந்தான். அவனுக்கு பலசரக்கு கடையும்,
நில புலன்களும் சொந்தமாக இருந்தன. போதுமான
வருமானம் கிடைத்தாலும், மிகவும் கஞ்சனாக இருந்தான்.
அவனுடைய பலசரக்கு கடையிலுள்ள அரிசி, பருப்பு
மூட்டைகளை, எலிகள் கடித்துக் குதறி ஓட்டை போட்டு தின்று
வந்தன.
சாம்பார் சக்கட்டிக்கு வயிறு எரிந்தது. 'வாயைக் கட்டி, வயிற்றைகட்டி சேர்க்கும் சொத்துக்களை எல்லாம் எலிகளே தின்று நாசமாக்கி விடுகிறதே...' என்று மிகவும் வருந்தினான்.
எலிகளைப் பார்க்கும் போதெல்லாம் அவற்றை அடிக்க,
ஒரு குச்சியை தூக்கியபடி ஓடுவான். அந்த எலிகளோ,
மூட்டைகளின் மேலும், கீழும் எகிறிக் குதித்து வளைகளுக்குள்
புகுந்து, வேடிக்கை காட்டி வந்தன. போதாதென்று தனது பணியாட்கள் இருவரை எலியை அடிப்பதற்காக ஒரு நாள் முழுவதும் ஒய்வு இன்றி காவல் வைத்தான்.
வேலையாட்களுக்கு தக்க கூலியும் அளிக்காமல் ஓய்வும் அளிக்காமல் அவர்களை நிற்க வைத்து வேலைவாங்கினான் அவ்வப்போது எலி அடிக்ககூட துப்பு இல்ல என்று கண்டபடி திட்டி தீர்ப்பான்.ஆசை வார்த்தை பேசி வேலை வாங்குவது பின்பு திட்டுவது இதுதான் நமது சாம்பார் சக்கட்டியின் அற்புதமான அதிசயமிக்க குணம் 
நாளுக்கு நாள் எலிகளின் குடும்பம் பெருகி வளர்ந்தன.
கருமி சாம்பார்சக்கட்டிக்கோ எலிகளை ஒழிக்க, என்ன செய்வதென்றேபுரியவில்லை.நண்பர்களிடம், ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினான். அந்த கூட்டத்தில்
நண்பர்களே  ஒரு எலி என்பது ஒரு விலங்கு என்று ஆரம்பித்து சுமார் ஒரு 2.30 மணிநேரம் சோழற்பொழிவு ஆற்று  ஆற்று என்று ஆற்றினான். ஆகவே ''எலித்தொல்லையில் இருந்து விடுபட ஏதாவது
வழி இருக்கிறதா?'' என்று கலந்து
ஆலோசித்து சொல்லுங்கள் நாம் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் நமது ஆலோசனை கூட்டத்தை தொடரலாம் என்று தேநீர் அருந்திவிட்டு மீண்டும் கூட்டத்தை தொடரும்பொழுது
ஒரு நண்பன் ஒருவன்
''எலிப்பொறி வாங்கி, அதில் ஒரு தேங்காய்த் துண்டை மாட்டி
வைத்தால், அதைத் தின்பதற்காக உள்ளே நுழையும் எலி மாட்டிக்கொள்ளும்...'' என்று கூறினான்.
''நல்லா இருக்குடா உன் யோசனை. காசு கொடுத்து எலிப்பொறி
வாங்கணும்; அப்புறம் தேங்காயை வேறு வாங்கி வைத்து
வீணாக்கணும்; எத்தனை தண்டச் செலவு. எலிகளால் வீணாவது
போதாதென்று, எலிகளை பிடிப்பதுக்கு வீண் செலவு செய்யணுமா,''என்று சலித்துக் கொண்டான் சாம்பார்சக்கட்டி.
''அதானே! எலிகளைப் பிடிக்க, செலவே இல்லாத வழி இருக்கிற
போது, தண்டச் செலவு ஏன் செய்யணும்,'' என்றான் சாம்பார் சக்கட்டியின் சங்கத்தை சேர்ந்த நண்ப(பி)ர்.
''செலவில்லாத வழி இருக்கா... என்ன வழி சொல்லு,'' என்று
ஆர்வத்தோடு கேட்டான் சாம்பார் சக்கட்டி.

''உன் கடையில ஒரு பூனையை வளர்த்தால் போதுமே...
அது எலிகளைப் பிடிச்சுடுமே,'' என்றான்.

''பூனையை வளர்க்கிறதா... பூனைக்கு வேறு சாப்பாடு போடணுமே,''
என்று கவலையோடு சொன்னான் சாம்பார் சக்கட்டி.

''அதுதான் இல்லை... பூனைக்குப் பசிக்கும் போதெல்லாம்,
ஒவ்வொரு எலியாக பிடித்துத் தின்று கொள்ளும்,'' என்றான்
சங்கத்தை சேர்ந்த நண்ப(பி)ர்.

மறுநாளே வீடு வீடாகப் போய், பூனையை தானம் கேட்டான்
சாம்பார் சக்கட்டி.

ஒரு வீட்டுக்காரர், போனால் போகிறது... என்று ஒரு பூனைக்
குட்டியை சாம்பார் சக்கட்டியிடம் கொடுத்தார்.

அதை வாங்கி வந்து, கடைக்குள் விட்டான் சாம்பார் சக்கட்டி. அந்தபூனையும், எலிகளை விரட்டி பிடித்துத்தின்று வாழ்ந்து வந்தது.

ஒருநாள்-
சாம்பார் சக்கட்டி குடிப்பதற்காக, ஒரு செம்பில் பால் கொடுத்தாள்மனைவி. அப்போது, கடையில் சிறிது கூட்டம் இருந்ததால்,பக்கத்தில் வைத்து விட்டு வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான்
சாம்பார் சக்கட்டி.

கூட்டம் குறைந்ததும், பாலைக் குடிக்கலாம்... என்று திரும்பிப்
பார்த்த சாம்பார் சக்கட்டி அதிர்ச்சியடைந்தான்.
பாலை, குடித்துக் கொண்டிருந்தது பூனை.
'அட திருட்டுப் பூனையே! உன்னை எலிகளைப் பிடித்து வாழச்
சொன்னால், நீ எனக்கு வைத்த பாலையே குடிக்கிறாயா... உன்னை
என்ன செய்கிறேன் பார்...' என்று கூறி, எலிகளை அடிப்பதற்காக
வைத்திருந்த கம்பை எடுத்து, பூனையின் தலையில் ஒரே போடாகப்
போட்டான்.

அந்த அடி பூனையின் தலையில் பலமாக விழ, 'மியாவ்' என்ற
அலறலோடு அந்த இடத்திலேயே இறந்தது.

அதைப் பார்த்த ஒருவர், ''ஐயோ என்ன காரியம் செய்து விட்டாய்
சாம்பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பூனையைக் கொல்வது பெரிய பாவமாயிற்றே.
இதற்கு, உடனே பரிகாரம் செய்துவிடு. இல்லாவிட்டால், இந்தப் பாவம்,
உன்னை, உன் பரம்பரையையும் விட்டு வைக்காது,'' என்றார்.

அதைக் கேட்டுப் பயந்த சாம்பார் சக்கட்டி, உடனடியாக கடையைப்
பூட்டிவிட்டு, பரிகாரம் செய்பவரைத் தேடி சென்றான்.

உள்ளூர்காரனான பரிகாரி,
வேறு யாரும் அல்ல நமது சபாபதியார்தான் அவனுடைய கஞ்சத்தனத்தை
நன்கு அறிந்தவர். அதனால், சாவகாசமாக தன்
வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, வந்த காரியம் என்ன
என்று சாம்பார் சக்கட்டியை விசாரித்தார்.

''சாமி! நான் ஒரு பூனையை அடித்துக் கொன்று விட்டேன்.
அது பெரிய பாவமாமே! அதற்கு நீங்கள் தான் வந்து ஏதாவது
பரிகாரம் செய்ய வேண்டும்!'' என்றான்.

சாம்பார் சக்கட்டிக்கு நன்றாகப் பாடம் புகட்ட விரும்பிய நமது சபாபதியார்,
''அடேடே பூனையைக் கொன்றவனுக்கு நரகம் அல்லவா
கிடைக்கும். நீ பூனையை ஏன் கொன்றாய்... எப்படிக் கொன்றாய்?''
என்று கேட்டார்.

''ஒரு பெரிய கம்பால் அடித்துக் கொன்றேன் சாமி!'' என்றான்.

''அப்படியானால், அதே கம்பால் உன் தலையிலும் ஓங்கி அடி
கொடுப்பது தான் இதற்கு பரிகாரம். நீ போய் அந்தக் கம்பை
எடுத்து வா,'' என்று  கூறினார்.

''ஐயோ சாமி! நானும் செத்துப் போய் விடுவேனே...''
என்று அலறினான் சாம்பார் சக்கட்டி.

''அதனால் என்ன... உன் பாவம் போய்விடுமே. நீ நேராக
சொர்க்கத்திற்கே போய் விடலாம்,'' என்று மேலும் அவனைச்
சீண்டினார்.

''வேண்டாம் சாமி. நான் இப்போதே சொர்க்கத்திற்கு போக
விரும்பவில்லை. தயவு செய்து வேறு பரிகாரம் ஏதாவது
இருந்தால் பார்த்துச் சொல்லுங்கள்,'' என்றான் சாம்பார் சக்கட்டி.

''சரி! இன்னொரு பரிகாரம் இருக்கிறது. சுத்தமான தங்கத்தில்
பூனை உருவத்தை செய்து எவருக்கேனும் தானமாகக்
கொடுத்தால், பூனையைக் கொன்ற பாவம் தீர்த்துவிடும்!''
என்றார்.

சாம்பார் சக்கட்டியும் மனம் வருந்தியபடியே, தன் கஞ்சத்தனத்துக்கு
இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! என்று எண்ணியபடி
தங்கத்தில் பூனை செய்து, அவருக்கே தானமாக கொடுத்தான்.

சகோதர சகோதரிகளே , 

சரியான தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாத தொண்டன்,

நியாயமான சந்தர்ப்பங்களை இழந்து விடுகிறான். சரியான

தொண்டனை அடையாளம் கண்டு கொள்ளாத தலைவன், இன்று நான் மௌன விரதம்  ... சரியா

Monday, December 20, 2021

 

கொடுகு பட்டிணம் எனும் ஊரில் கவிக்குட்டன் என்று ஒருவன் இருந்தான். இவனுக்கு புத்தி எப்பொழுதும் காது வழியாக கசிந்து கொண்டே இருக்கும் அப்பேற்பட்ட புத்திசாலி.ஒருசமயம் காய்கறி வாங்க கடைவீதிக்கு சென்றான். புடலங்காய் வாங்கியவன் புடலங்காய் ஏன் வளைந்திருக்கிறது என்று காய்கறிக்காரரைக் கேட்டான். காய்கறிக்காரரும் "முதலிலேயே கல்லைக் கட்டியிருந்தால் அது நேராக வளர்ந்திருக்கும். அப்படிச் செய்யாமல் விட்டதால் தான் இப்படி வளைந்து விட்டது" என்றார்.

இப்படிப் பொது அறிவை வளர்த்துக் கொண்ட கவிக்குட்டன் தன் வீட்டிற்குச் சென்றவுடன் வீட்டில் இருந்த குட்டி நாயின் வால் வளைந்திருப்பதைக் கவனித்தான். உடனே அவன் மூளையில் மின்னல் வெட்டியது. சமீபத்தில் பெற்ற ஞானத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த கவிக்குட்டன் உடனடியாக ஒரு கல்லை எடுத்து நாய் வாலில் கட்டி விட்டான். நாய் பாடு திண்டாட்டமாகி விட்டது. அது பரிதாபமாகக் கத்தி அமர்க்களம் செய்ய ஆரம்பித்து விட்டது. நாயின் கூக்குரலை சகித்துக் கொள்ள முடியாமல் வந்து பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாருக்கு கவிகுட்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தி  நாயின் வாலில் இருந்து கல்லைக் கழற்ற வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.

இந்த கவிகுட்டனின்  செய்கை பைத்தியக்காரத்தனமானதாகவும் கேலிக்குரியதாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் நாமும் அப்படி எத்தனையோ முட்டாள் தனங்களை நம் வாழ்க்கையில் செய்து கொண்டே செல்கிறோம்.

நாய் வாலைப் போல் நம்மால் மாற்ற முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மாற்ற முடியாத மனிதர்களும் இருக்கத் தான் இருக்கிறார்கள். சரிசெய்து தான் தீருவேன் என்று மல்லுக்கட்டி நின்றால் இந்த விஷயத்தில் நாம் வெற்றி காணப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் இயற்கையை மாற்ற முடியாது.

ஏன் மாற்ற முடியாது? என்று கேட்டு மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வரப் பாடுபடும் பலரைப் பார்த்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் தேவையில்லாத ஈகோவைத் திருப்திப்படுத்துவதை விட வேறொரு பலனும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நாய் வாலில் கல்லைக் கட்டிய முல்லாவைப் போல் இவர்களும் அடுத்தவர் மீது திணிக்கும் அந்தக் கட்டாயம் அடுத்தவருக்கும் பிராண சங்கடம்.

ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பதைக் கேட்பதை விட்டு நாய் வாலை நிமிர்த்துவது தேவையா அவசியமா என்று முதலில் சிந்திப்பது தான் புத்திசாலித்தனம். இதை சாதித்து கிடைக்கப் போகிற பலன் என்ன என்று கணக்கு போட்டுப் பார்ப்பது விவேகம்.

எனவே இப்படி நாய் வாலை நிமிர்த்துவது போன்ற ஏதாவது ஒரு காரியத்தை நாம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வது உத்தமம். அப்படி இருக்குமானால் அதை உடனடியாக விட்டு விடுவது நல்லது. நாம் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் நிறையவே இருக்கின்றன. நமது கவனத்தை அந்தப் பக்கம் திருப்புவோமாக.

 

 

வெட்டிப்பயல்கள்

ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார குடியானவன் இருந்தார்.அவருக்கு இருபுதல்வர்கள் இருந்தனர் ஒருவன் பெயர் வென்சடையன்  மற்றொருவன் பெயர் மண்சடையன்.ஆனால் இருவருக்கும் தலை முழுவழுக்கை .  அவர்கள் இருவருக்கும் ஒரு வேலையும் செய்ய தெரியாது தண்டத்தீனி தின்று வெட்டி பொழுது போக்கி வந்தார்கள்.இவர்கள் இருவரும் இப்படியே இருந்தால் இவர்களது எதிர்காலம் என்னாவது என்று யோசித்த இவரது தகப்பனார் இவரது புதல்வர்களை அழைத்து நீங்கள் இருவரும் இப்படி சும்மாவே இருந்து தண்டத்துக்கு சாப்பிட்டு வெட்டிப்பொழுது போக்குவது சரியல்ல.ஆனால் தகப்பனார் பேசும்பொழுது யோவ் பெருசு உயிர வாங்காத போயா என்று போனார்கள் சடையர்கள் .பிறகு ஒருநாள் முதல் மகனான வென்சடையனை அழைத்து நீ உன் மாமா ஊருக்கு சென்று அங்கு எல்லோரும் சுகமா என்று அறிந்து வா அந்த ஊரில் ஒரு மண்ணும் கிடையாது அதனால் அங்கேயே உட்கார்ந்திராமல் மறுநாளே திரும்பி வந்துவிடு என்றார் தகப்பனார் வென்சடையன் தனது மாமன் ஊருக்கு கிளம்பினான் போகும்பொழுது ஒரு மூட்டை நிறைய மண்ணை சுமந்து சென்றான் .அவன் தனது தாய்மாமன் ஊரை அடைந்தான் இவன் கையிலே மூட்டையோடு வருவதை பார்த்த இவரது மாமா என்னடா அது மூட்டை என்று இவனோ அப்பாதான் சொன்னார் இந்த ஊரிலே ஒரு மண்ணும் கிடையாது என்று சரி கழுதை மண்ணாவது இருக்கட்டுமே என்று ஒரு மூட்டை மண் கொண்டு  வந்தேன் . என்றான் அதை கேட்ட அவனது மாவையும் மற்றவர்களும் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டனர் .சடையன் ஊர் திரும்பும் பொழுது அவன் மாமா தம்பி நீ எங்க போனாலும் ஒரு கெட்டிக்காரனை துணையாக அழைத்து  போ அவனும் அப்படியே செய்வதாக கூறி தன ஊருக்கு போனான் அங்கு தன மாமன் வீட்டில் நடந்ததை எல்லாம் கூறினான் தந்தையும் சரி நீ ஒன்று செய் எங்கு சென்றாலும் தனியாக செல்லாதே என்று சொன்னார்.

பிறகு தனது இரண்டாவது மகன் வென்சடையனை அழைத்தார் .நீ நம் வயலுக்கு போய் குடிசை போட்டு அங்கேயே தங்கி இந்த வருடம் விவசாயத்தை கவனி .என்றார் அவனும் சரி என்று சொல்லிவிட்டு வயலுக்கு சென்று ஓரமாக குடிசைபோட்டு இருக்கலானான் .அந்த வருடம் காட்டில் வேர்க்கடலை போடுவதற்கு விதைக்கடலை ஓரிடத்தில் வைத்திருந்தார்கள் ஒரு வென்சடையான் பச்சை கடலையை எடுத்து தின்றான் அதை கண்ட வேலையாட்கள் ஐயா வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடாதீர்கள் வறுத்து தருகிறோம் என்று சொல்லி கொஞ்சம் கடலையை என்னிடத்து சென்று வறுத்து கொடுத்தனர் அவனும் அதை சாப்பிட்டு விட்டு வெகு ருசியாக இருப்பதை கண்டான் அவன் மனதில் ஆஹா இவர்கள் கடலையை பச்சையாகவே விதைத்து விளைவித்து மீண்டும் வறுப்பதற்கு ஒட்டுமொத்த கடலையும் வறுத்தே விதைத்துவிட்டால் வருத்தக்கடலையே விளையும் அல்லவா என்று இவனது அதீதமான மூளை கபாலத்திற்குள் இருக்க முடியாமல் காது வழியாக வெளியேறி சற்று  அசாதாரணமாக யோசித்தது.உடனே ஆட்களுக்கு கட்டளை இட்டான்  . விதையாக வைக்க பட்டிருந்த அனைத்து விதைக்கடலையும் வறுக்கும் படி சொன்னான் ஐயோ முதலாளி எல்லாம் வீணாப்போயிடும் என்றனர் வேலையாட்கள் நான் உங்கள் எஜமானன் புரிந்ததா  பேசாமல் நான் சொன்னபடி செய்யுங்கள் .எல்லாம் எனக்கு தெரியும் .என்றான் வேலையாட்கள் வேறுவழியில்லாமல் இவன் சொன்னதை செய்துவிட்டு ஓடி சென்று நடந்ததை இவன் தந்தையிடம்  சொன்னார்கள்.அவரும் தந்து மகனை வீட்டிற்கு அழைத்துக்கொண்டுவிட்டார் விதைக்க வேறு விதைக்கடலை வாங்கித்தந்தார் .தந்தைக்கு நாளுக்கு நாள்கவலை அதிகரித்த அதிகரித்தது .இறுதியாக இறுதியாக ஓர் முறை முயற்சி செய்து பார்ப்போம் என்று யோசித்து விஷபரீக்ஷையில் இறங்கினார் .சடையர்கள் இருவரையும் அழைத்து உங்கள் இருவருக்கும் ஒரு பொறுப்பு தருகிறேன் பெரிதாக ஒன்றும் அல்ல நீங்கள் இருவரும் சென்று நமது மாட்டுப்பட்டியை நன்கு கவனித்து கொள்ளுங்கள் அங்கு இருக்கும் எருமை பசுமாடு முதலியவற்றின் பாலை கறந்து விற்று பனைக்கு அனுப்புங்கள் இருவரும் மாட்டுப்பட்டிக்குள் புகுந்தனர் பாவம் பசுக்கள் எந்த ஜென்மத்தில்  யாருக்கு என்ன தீங்கு செய்ததோ .இவர்கள் இருவரும் சில நாட்கள் வழக்கத்தை அனுசரித்தனர்  ஒருவன் இருந்தால் விஷேஷம் இருவரும் சேர்ந்து விட்டனர் ரொம்ப விஷேஷம் சில நாட்களுக்கு பின்னர்இவர்கள் இருவர் மூளையிலும் தீடிரென்று ஓர் அற்புத வெளிச்சம் பசுக்கள் கொஞ்சம் பால்தான் கறக்கின்றது.பாலை தினமும் கறக்காமல் ஒரு 20 நாட்களுக்கு பின்னர் கறந்தால் நிறைய பால் கிடக்கும் அல்லவா என்று யோசித்த வழுக்கை சடையர்கள் வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினார் பொங்கலுக்கு ஒரு மாத்திற்கு முன்னரே பால் கறப்பதை நிறுத்தி விட்டனர்வேலையாட்கள் என்ன செய்வார்கள் பாவம் பால் கறப்பதை நிறுத்தி விட்டனர் .பொங்கலுக்கு முதல் நாள் பால் கறக்க உத்தரவிட்டார்கள் வழுக்கை சடையர்கள், முடிந்தது ஜோலி ஒருமாடும் ஒரு சொட்டு பால் கூட கறக்கவில்லை நீண்டநாட்கள் பால் கறக்காமல் இருந்ததால் மாட்டின் மாடி எல்லாம் வற்றி போய்விட்டது வேலையாட்கள் அனைவரும் சென்று சடையர்களின் தந்தையிடம் நடந்த அனைத்தையும் சொன்னார்கள் அவர் தலையில் அடித்து கொண்டார்

 சபாபதியாரின் கதைப்பகுதிக்கு வருக வருகவே இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல வாங்க கதையை பார்ப்போம்.

கதையின் பெயர் :

மு(ம)ந்திரி என்கின்ற புல்லாங்குழல் மார்த்தாண்டன்

ஹிரன்யகஸ்ருங்கம் எனும் இயற்கைவளங்கள் கொண்ட அற்புத ராஜ்ஜியம்.இந்த ராஜ்யத்தை பூபேந்திரன் எனும் மன்னன் ஆண்டு வந்தான்.ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து லக்ஷணங்களும் இவனிடம் இருந்தது.இவனது ராஜ்யத்தில் மக்கள் சுகவாசிகளாக இருந்தனர். பிறந்த ஊரை விட ஸ்வர்கம் ஏது? ஸ்வர்கம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று மக்களின் நம்பிக்கை ஏனென்றால் அரசன் ராஜ்யத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் கண் போன்று காத்து வந்தான். இப்படி இருக்க ராஜ்யம் என்று இருந்தால்

மந்திரி என்று ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா! மந்திரி சோமசேகரவர்மன் என்பவர்தான் செவ்வனே மந்திரிப்பதவியை அலங்கரித்து வந்தார் ஆனால் அண்டைய நாட்டிற்கு செல்லும் பொழுது மலையிலிருந்து உருண்டு விழுந்து இறந்துபோனார் நல்லோர்களுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என்று மன்னன் பூபேந்திரன் மந்திரிப்பதவியை அலங்கரிக்க புதிதாக ஒருவரை நியமித்தார். இந்த மந்திரியின் பெயர் புல்லாங்குழல் மார்த்தாண்டன். ஒரு (மு)மந்திரிக்கு என்னென்ன துர்குணங்கள் இருக்க கூடாதோ அனைத்து துர்குணங்களும் இவரிடத்தில் செவ்வனே குடிகொண்டு இருந்தது..இந்த மந்திரியின் பெயர் புல்லாங்குழல் மார்த்தாண்டன் மந்திரியின் நரித்தனம் மன்னனுக்கு தெரியாது. சிறிய பொருட்கள் வாசனை திரவியங்கள் விற்க அரணமனைக்கு சென்று முகஸ்துதி பாடி எப்படியோ ஓர் பதவியை பிடித்தான்.பின்னும் ராஜாவிற்கு விசுவாசியாக இருப்பது போன்று நடித்து மந்திரி பதவியையும் பெற்றான் .இப்படிப்பட்ட ஒரு மந்திரியை வைத்து கொண்டு ராஜ்யத்தை செழிப்பாக நடத்திகொண்டு இருந்தார் பூபேந்திரமன்னன். மந்திரியோ கள்ளத்தனமான சிரிப்பு,வேகமான நடை, சப்பைமூக்கு சாலவாயன், சட்டிமண்டை ,சுமாரான தொப்பை என்று ஒரு திருடனுக்கு  தேவையான அனைத்து சாமுத்ரிகா லக்ஷணமும் நமது புல்லாங்குழலிடம்  பொருந்தியிருந்தது. மக்களின் நலம்விரும்புபவன் அரசன் அதை தனக்கு சாதகமாக்கி கொள்பவன் நமது புல்லாங்குழல் என்று இந்த ராஜ்ஜியம் கோணலாக அல்லாமல் நேர்கோணலாக இருந்தது.மன்னனுக்கு முன் மக்கள் சந்தோஷமாக இருப்பது போல் நன்கு நடித்து வந்தனர் . நாளாக நாளாக அரண்மையில் இருக்கும் முக்யஸ்தர்கள்,ராஜ்யத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் மன்னனின் முகத்தை மறந்தே போனார்கள். புல்லாங்குழலுக்கு மீறி ராஜ்யத்தில் ஒரு துரும்புகூட அசையாது என்று ஆயிற்று.இப்படி இருக்க மன்னனுக்கு ஓர் அழகிய குழந்தை இருந்தது.அந்த குழந்தையை குருகுலவாசத்திற்கு சேர்க்க முடிவுகட்டினார் மன்னன் .சொல்லி வைத்தாற்போல் நமது புல்லாங்குழலுக்கும் ஒரு மகன் இருந்தான் அவனையும் குருகுலவாசத்தில் சேர்க்க முடிவு காட்டினார்கள்.மன்னன் சரியான தேதியில் தனது புதல்வனை அழைத்து கொண்டு குருகுலத்திற்கு சென்று குருகுலத்தில் இருக்கும் ஆச்சார்யர்களுக்கு தக்க மரியாதை செய்து கெளரவித்து தனது மகனை குருகுலவாசத்தில் சேர்த்து வந்தான்.ஆனால் நமது புல்லாங்குழல் கொஞ்சம் வித்தியாசமாகவே சிந்தித்தான் குருகுலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டான்.

குருகுலத்தில் இருக்கும் ஆச்சார்யர்களையே தனது இஷ்டப்படி ஆட்டிவைத்தான்.ஏனென்றால் தனது மகன் கல்வி பயிலக்கூடிய இடம் தன் மகனின் இஷ்டப்படி இருக்கவேண்டும் என்றும் வசதியாகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தான்.இதற்க்கு முன்பு ராஜ்யத்தில் இருக்கும் குருகுலத்தில் எத்தனை சிஷ்யர்கள் இருக்கின்றனர் என்று தான் பார்த்தானே தவிர அங்கு இருக்கும் அடிப்படை வசதிகள் என்ன யார் எப்படி இருக்கின்றனர் அவர்கள் கருப்பா வெளுப்பா என்று கூட பார்த்தது கிடையாது தனது மகனுக்கு என்று வந்த உடன் மகனை குருகுலத்திற்கு அனுப்பாமல் குருகுலத்தை தனது இல்லத்திற்கு மாற்றினான் தினமும் ஆச்சார்யர் தனது இல்லத்திற்கு வந்து தனது மகனுக்கு வித்யாபியாசம் செய்வித்து செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். தன் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செயகிறான் என்று மன்னனுக்கு தெரியாது பாவம் அரசன் வெளுத்தது எல்லாம் பால் தானே என்று நினைத்தான் இப்படி சென்றது அர்சனனின் மகனுக்கு இல்லாத முக்கியத்துவம் கேவலம் மந்திரியின் மகனுக்கு எதற்கு என்று ஒரு கேள்வி எழுந்தது.உடனே அனைத்து ஆச்சார்யர்களையும் தன் இல்லத்திற்கு அழைத்து அச்சுஅசலாக போலி போல் நடித்து அனைவரையும் கெளரவிப்பதுபோல் நடித்தான் ஆச்சார்யர்களே அனைவரும் சந்தோஷமாக இருங்கள் உங்கள் கண்ணில் கண்ணீர் வந்தால் நாங்கள் எங்கள் கையை வெட்டிக்கொளவதற்கு சமம் என்று போலி வார்த்தைகள் பேசி ஆச்சார்யர்களை சமாதானப்படுத்தினான். அரசனின் மகன் குருகுலத்தில் மற்ற மாணவர்களுடன் கல்வியை சரிவர பயின்று வந்தான்.மந்திரியின் மகனோ சற்று அலக்ஷியமாக நடந்துகொண்டான் காரணம் வளர்ப்பு. மந்திரியின் உண்மை முகம் மன்னனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மக்கள் பலர் பலமுறை செய்து பயனற்று போனது .ஆண்டுகள் பல சென்றன மிஞ்சிய சில கெளரவத்துடன் ஆச்சார்யர்கள் எப்படியோ வித்யாபியாசத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர் மந்திரியின் மகனுக்கு அப்யாஸம் பூர்த்தியானது அரசனின் மகனுக்கு சற்றுகாலதாமதமாகவே ஆனது .வித்யாபியாசம் பூர்த்தியாகி விட்டால் அவர்கள் கற்றுக்கொண்டதை அரசன் நாட்டுமக்கள் அனைவரின் முன்பும் பரீக்ஷை செய்துபார்பது வழக்கம் பரீக்ஷை தேதி அறிவிக்கப்பட்டது. ராஜதர்பாரில் மக்கள் மந்திரிகள் அரசன் அரசனின் மகன் புல்லாங்குழலின் மகன் மற்ற சிஷ்யர்கள் அனைவரும் இருந்தனர் பரீக்ஷை ஆர்மபித்தது முதலில் வாக்பரீக்ஷை நடைபெற்றது மன்னனே நேரடியாக கேள்விகள் கேட்டான் மன்னனின் கேள்விகளுக்கு அரசகுமாரன் மற்ற சிஷ்யர்கள் பதில் சொன்னார்களே தவிர மந்திரியின் மகனால் சரிவர பதிலளிக்க முடியவில்லை நமது புல்லாங்குழல் மந்திரிக்கு முகம் மாறியது பிறகு ஷஸ்த்ர பரீக்ஷை  இதில் அரசனின் மகன் முதன்மை வகித்தான் மற்ற சிஷ்யர்களும் எப்படியோ தேர்ச்சிபெற்றனர் மந்திரிமகனின் சுற்று எப்படியேனும் தேர்ச்சிபெறவேண்டும் என்ற வேகம் அவனுக்குள் இருந்தது ஆனால் வித்தைகளை சரிவர நினைவில் வைத்துக்கொள்ளமுடியாமல் திணறினான் அரசனுக்கு லேசாக ஆச்சார்யர்களின் சந்தேகம் எழுந்தது ஆச்சார்யர்களை அழைத்து கேட்டபோது அனைவருக்கும் எப்பைடயோ அப்படித்தான் இவனுக்கும் கற்றுத்தந்தோம் மன்னா என்றனர் ஆச்சார்யர்கள் இல்லையே மன்னனின் மகன் என்பதனால் என் மகனுக்கு முக்கியத்துவம் அளித்தீர்கள் இவனுக்கு எதுவுமே சொல்லித்தராமல் விட்டாற்போல் தெரிகின்றது என்றார் அரசன் அப்படியானால் மற்ற சிஷ்யர்களும் அல்லவா தோல்வியை தழுவியிருக்க வேண்டும் மன்னா என்றனர் ஆச்சார்யபெருமக்கள் அது மன்னனுக்கு சரி என்றே பட்டது இப்பொழுது மந்திரி முந்திக்கொண்டான் இல்லை மன்னா இவர்கள் பொய்யுரைக்கின்றனர்.என் மகனை த்வேஷித்தார்களே தவிர அவனுக்கு கடுகளவும் கற்று தரவில்லை என்று வாதிட்டார் புல்லாங்குழல்  ஆச்சார்யர்கள் மற்றும் மந்திரி இருவரும் பேசுகையில் ஒரு சிஷ்யனின் வாழ்க்கையை பாழாக்கிய வேகம் ஆச்சார்யர்களின் பேச்சில் த்வனித்தது  மந்திரி மகனின் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் .மந்திரி அதனை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயற்சித்தான் அரசன் மந்திரி மகனை அழைத்து குழந்தாய் மற்ற மாணவர்களை போல் ஏன் நீ அப்யாசம் செய்யவில்லை.ஒரு பரீக்ஷையிலும் தேர்ச்சி பெறவிலையே ஏன் என்று அரசன் கேட்ட பொழுது தன் மகன் தனக்கு சாதகமாக பேசுவான் என்று நினைத்தான் புல்லாங்குழல் ஆனால் மந்திரி மகனோ தனது இந்த நிலைமைக்கு காரணம் தன் தந்தையென்று தான் வித்யாபியாசம் செய்த் முறையை ஒன்றுவிடாமல் கண்ணீருடன் சொன்னான் மந்த்ரிர்யின் மகன் தன்னை தன் தந்தை முட்டாளாக்கி விட்டார் என்ற மகனுக்கு மகனின் வாழ்க்கையை இப்படி பாழாக்கி விட்டாயே என்றார் அரசன் பின்புதான் மக்களும் மற்றைய அரண்மனை வாசிகளும் மந்திரியை பற்றி ஒன்றிவிடாமல் சொன்னார்கள் தன்னை மட்டும் அல்லாமல் தன்னை நம்பியிருந்த அனைவரையும் ஏமாற்றிய பாவத்திற்கு மந்திரி புல்லாங்குழலுக்கு ராஜ்யத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார் அரசர் தன் மனைவிமக்களுடன் வெளியேறுகையில் கேவலம் போலி கெளரவத்திற்காக தவறு செய்துவிட்டோம் தன் மகனின் வாழ்க்கையும் பாழாகி விட்டதே என்று நொந்து உயிரை விட்டான் மந்திரி புல்லாங்குழல் மார்த்தாண்டன்.

சகோதர சகோதரிகளே

விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும், மதிகெட்டோருக்கு புல்லாங்குழலின்……….இதற்கு நான் சொல்லவா வேண்டும்

Saturday, December 4, 2021

 சபாபதியாரின் கதைப்பகுதிக்கு வருக வருகவே இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல வாங்க கதையை பார்ப்போம்.

கொடுகு பட்டிணம் எனும் ஊரில் கவிக்குட்டன் என்று ஒருவன் இருந்தான். இவனுக்கு புத்தி எப்பொழுதும் காது வழியாக கசிந்து கொண்டே இருக்கும் அப்பேற்பட்ட புத்திசாலி.ஒருசமயம் காய்கறி வாங்க கடைவீதிக்கு சென்றான். புடலங்காய் வாங்கியவன் புடலங்காய் ஏன் வளைந்திருக்கிறது என்று காய்கறிக்காரரைக் கேட்டான். காய்கறிக்காரரும் "முதலிலேயே கல்லைக் கட்டியிருந்தால் அது நேராக வளர்ந்திருக்கும். அப்படிச் செய்யாமல் விட்டதால் தான் இப்படி வளைந்து விட்டது" என்றார்.

இப்படிப் பொது அறிவை வளர்த்துக் கொண்ட கவிக்குட்டன் தன் வீட்டிற்குச் சென்றவுடன் வீட்டில் இருந்த குட்டி நாயின் வால் வளைந்திருப்பதைக் கவனித்தான். உடனே அவன் மூளையில் மின்னல் வெட்டியது. சமீபத்தில் பெற்ற ஞானத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த கவிக்குட்டன் உடனடியாக ஒரு கல்லை எடுத்து நாய் வாலில் கட்டி விட்டான். நாய் பாடு திண்டாட்டமாகி விட்டது. அது பரிதாபமாகக் கத்தி அமர்க்களம் செய்ய ஆரம்பித்து விட்டது. நாயின் கூக்குரலை சகித்துக் கொள்ள முடியாமல் வந்து பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாருக்கு கவிகுட்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தி  நாயின் வாலில் இருந்து கல்லைக் கழற்ற வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.

இந்த கவிகுட்டனின்  செய்கை பைத்தியக்காரத்தனமானதாகவும் கேலிக்குரியதாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் நாமும் அப்படி எத்தனையோ முட்டாள் தனங்களை நம் வாழ்க்கையில் செய்து கொண்டே செல்கிறோம்.

நாய் வாலைப் போல் நம்மால் மாற்ற முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மாற்ற முடியாத மனிதர்களும் இருக்கத் தான் இருக்கிறார்கள். சரிசெய்து தான் தீருவேன் என்று மல்லுக்கட்டி நின்றால் இந்த விஷயத்தில் நாம் வெற்றி காணப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் இயற்கையை மாற்ற முடியாது.

ஏன் மாற்ற முடியாது? என்று கேட்டு மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வரப் பாடுபடும் பலரைப் பார்த்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் தேவையில்லாத ஈகோவைத் திருப்திப்படுத்துவதை விட வேறொரு பலனும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நாய் வாலில் கல்லைக் கட்டிய முல்லாவைப் போல் இவர்களும் அடுத்தவர் மீது திணிக்கும் அந்தக் கட்டாயம் அடுத்தவருக்கும் பிராண சங்கடம்.

ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பதைக் கேட்பதை விட்டு நாய் வாலை நிமிர்த்துவது தேவையா அவசியமா என்று முதலில் சிந்திப்பது தான் புத்திசாலித்தனம். இதை சாதித்து கிடைக்கப் போகிற பலன் என்ன என்று கணக்கு போட்டுப் பார்ப்பது விவேகம்.

எனவே இப்படி நாய் வாலை நிமிர்த்துவது போன்ற ஏதாவது ஒரு காரியத்தை நாம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வது உத்தமம். அப்படி இருக்குமானால் அதை உடனடியாக விட்டு விடுவது நல்லது. நாம் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் நிறையவே இருக்கின்றன. நமது கவனத்தை அந்தப் பக்கம் திருப்புவோமாக.

 

 

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.
அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..
ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.
அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.
அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய்.

 இது அவைகளுக்கு பத்தாது.
""நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.
அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ""என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.

""உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.

அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

நீதி: நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.

 ஒரு அரசு அலுவலகத்தின் பூட்டி வைக்கப்பட்டு இருந்த பதிவு அறைக்குள் (Record Room) ஒரு சின்ன இடைவெளி வழியாக ஒரு பாம்பு புகுந்தது.

அதனை, அவ்வலுவலக ஊழியர் ஒருவர் பார்த்து விட்டு, தனது கண்காணிப்பாளரிடம் இவ்வாறு நமது அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்து விட்டது என்று தெரியப்படுத்தினார். கண்காணிப்பாளரும், தனது மேல் அதிகாரியுடன் கலந்து ஆலோசிக்க நினைத்தால் அவர் அலுவல் விஷயமாக ஒரு வாரம் வெளியூர் சென்று இருந்தார்.

ஒரு வாரம் கழித்து மேல் அதிகாரி வந்தவுடன், கண்காணிப்பாளர் அவரிடம், கடந்த வாரம் தாங்கள் இல்லாத பொழுது நமது அலுவலகத்திற்குள் ஒரு பாம்பு புகுந்து விட்டது, அதனைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலதிகாரியும், “சரி, அந்தப் பாம்பினைப் பிடிக்க வனத்துறைக்கு கடிதம் எழுதுங்கள்” என்று கூறிவிட்டார்.

கண்காணிப்பாளரும், பாம்பினைப் பிடித்து தர வனத்துறைக்கு கடிதம் எழுத, அங்கு இருந்து ஒரு வாரம் கழித்து பதில் வந்தது.

“பாம்பினைப் பிடிக்கும் எங்கள் அலுவலக ஊழியர்கள் தற்சமயம் இல்லை, அவர்கள் ஒரு மாதம் பயிற்சிக்காக சென்று உள்ளனர். நீங்கள் ஒரு தனியார் பாம்பு பிடிப்பவரை வைத்து பிடித்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்து இருந்தார்கள்.

உடனே, கண்காணிப்பளாரும், அடுத்து ஒரு கடிதத்தை வனத்துறைக்கு 

அதில் “அவ்வாறு நாங்கள் தனியாரை வைத்து பாம்பு பிடித்தால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் வனத்துறை மூலம் எங்களுக்கு தரப்படுமா?” என்று கேட்டு இருந்தார். அதற்க்கு, “இல்லை, அவ்வாறு கொடுக்கப்பட மாட்டாது, நீங்களே அதற்க்கு உண்டான ஊதியத்தினை அரசிடம் இருந்து பெற்று கொடுங்கள்” என்று பதில் வந்தது.

உடனே, கண்காணிப்பாளர் வனத்துறையினர் அறிவுரையை மேற்கோள் காட்டி தலைமை செயலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் இவ்வாறு பாம்பு புகுந்து விட்டது, அதனை பிடிப்பதற்கு உண்டான ஊதிய தொகையை தனி அரசு ஆணை மூலம் பட்ஜெட்டில் போட்டு தர வேண்டும் என்று கோரி இருந்தார்.

அதற்க்கு, தலைமை செயலகத்தில் இருந்து இருவரங்களில் ஒரு பதில் வந்தது, உங்கள் அலுவலகத்தில் இதற்க்கு முன்னர் இது போன்ற பாம்பு புகுந்த சம்பவம் நடந்து இருக்கிறதா? என்று கேட்டு இருந்தார்கள். கண்காணிப்பாளரும், இல்லை, இதுதான் முதல் தடவை என்று பதில் எழுதினார்.

பின்னர் மேலும் இரு வாரங்கள் கழித்து தலைமை செயலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உங்களது பக்கத்துக்கு அலுவலங்களில், அல்லது உங்கள் துறை சார்ந்த வேறு அலுவலகங்களில் இது போன்ற சம்பவம் நடந்து உள்ளதா? என கேட்டு இருந்தார்கள். அதற்க்கும் கண்காணிப்பாளர் “இல்லை” என்று பதில் அனுப்பினார்.

பின்னர், தலைமை செயலகத்தில் இருந்து பிற துறைகளில் இது போன்று நடந்து இருந்தால் அதனை விசாரித்து அனுப்ப கேட்டு இருந்தார்கள். கண்காணிப்பாளரும், அவ்வாறு தனக்குத் தெரியவில்லை, நீங்களே விசாரித்து பாம்பினைப் பிடிப்பதற்கு உண்டான கூலி தொகையை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர், சில நாட்கள் கழித்து, தலைமை செயலகத்தில் இருந்து, பாம்பு என்றால் எத்தனை பாம்பு ?என்று தங்கள் கடிதத்தில் தெரியப்படுத்த வில்லை. அதனை தெளிவு படுத்துமாறு கூறி கடிதம் வந்தது.

கண்காணிப்பளாரும் ஒரு பாம்பு என்று பதில் அனுப்பினார்.

பின்னர் அங்கிருந்து, அந்த ஒருபாம்பினைப் பிடிக்க 200-ரூபாய் அரசு மூலம் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்படுவதாக அரசு ஆணை வந்தது.

கண்காணிப்பாளரும், ஒரு பாம்பு பிடிப்பவரைக் கூப்பிட்டு அந்த பாம்பினைப் பிடியுங்கள், ரூ-200 தருகிறேன் என்று கூற, அவரோ பணம் கையில் வந்தால் மட்டுமே பாம்பு பிடித்து தருவேன் என்று கூறி விட்டார்.

உடனே, கண்காணிப்பளாரும், சரி ரூ-200 க்கான பட்டியல் தாருங்கள், நான் கருவூலத்தில் அதனை வாங்கிய பின்னர் தங்களை அழைக்கிறேன் என்று பட்டியலை வாங்கி தனது ஊழியர் மூலம் கருவூலத்தில் சமர்ப்பித்தார்.

ஆனால், கருவூலத்தில் ஒரு வாரம் கழித்து தங்கள் இணைத்துள்ள அரசு ஆணையில் Section Officer கையெழுத்து உள்ளது. எங்களுக்கு Under Secretary கையொப்பம் போட்ட பிரதி வேண்டும் என்று பட்டியலை திருப்பி அனுப்பினார்கள்.

பின்னர், கண்காணிப்பாளரும், மீண்டும் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதி தங்களுக்கு Under Secretary கையொப்பம் போட்ட பிரதி வேண்டும் என்று கேட்டு வாங்கி இணைத்து அனுப்பினார்.

பின்னர் கருவூலத்தில், பட்டியலில் தனியாருக்கான GST விபரம் இல்லை, என்று இரண்டாம் முறையாக திருப்பி அனுப்பினர். கண்காணிப்பாளரும், GST-யுடன் கூடிய பில்லினை வாங்கி மூன்றாம் முறையாக சமர்ப்பித்தார்.

பின்னர், கருவூலத்தில், இந்த மாத சம்பளம் உங்களது அலுவலகத்தில் இன்னும் IFHRMS மென்பொருளில் சமர்ப்பிக்க வில்லை என்று கூறி அந்தப் பட்டியலை வாங்க மறுத்தனர். IFHRMS-ல் போடலாம் என்று நினைக்க, சர்வர் வேலை செய்ய வில்லை, உடனே விப்ரோ வை தொடர்பு கொண்டு கேட்க, அவர்கள் சர்வர் இரண்டு நாட்களுக்கு SHUT DOWN என்று கூறி விட்டார்கள்.

பின்னர் இரு நாட்கள் கழித்து கண்காணிப்பாளரும், உதவியாளர் உதவியுடன் அந்த மாத சம்பள பட்டியலை தயார் செய்து கருவூலத்தில் நான்காம் முறையாகக் சமர்ப்பித்தார்.

பின்னர், கருவூலத்தில், இந்த பாம்பு பில்லினை IFHRMS-ல் போட்டீர்கள் என்று கேட்க கண்காணிப்பளார் இல்லை என்று கூற, இதனையும் நீங்கள் கண்டிப்பாக IFHRMS-ல் போட வேண்டும் என திருப்பி அனுப்பினர்.

பின்னர் கண்காணிப்பளார் அதனையும் IFHRMSல் போட்டு பில்லினை சமர்ப்பிக்க, இறுதியாக கருவூலத்தில் வாங்கிக் கொண்டனர்.

பத்து நாட்கள் கழித்து, கருவூலம் மூலமாக பணம் பாம்பு பிடிப்பவர் அக்கௌண்டில் Rs.200/- வர, அவர் பாம்பு பிடிக்க கிளம்பி வந்தார்.

வந்ததும் கண்காணிப்பாளரிடம், எந்த ரூம்? என்று கேட்க, அவரும் பதிவறையை கை காட்டினார்.

உள்ளே பாம்பு பிடிக்க சென்றவர், இந்தப் பாம்பினையும் பிடிக்காமல் வெறும் கையுடன் திரும்பி வந்தார், அவரிடம் அனைவரும் என்னாச்சு? என்று வினவ, அவரோ, நீங்கள் ஒரு பாம்பு பிடிப்பதற்கு தான் ரூ.200 கொடுத்தீர்கள், ஆனால் உள்ளே சென்ற பாம்பு குட்டி போட்டு பின்னர் அந்த குட்டிகளும் வளர்ந்து குட்டி போட்டு இப்போ 100 பாம்புகளுக்கு மேல் உள்ள இருக்கின்றன என்று கூற, கண்காணிப்பாளர் மயக்கம் போட்டு விழுந்தார்.

 முன்பொரு காலத்தில் ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார் எப்பொழுதும் தனது வேலை விஷயமாக போவதும் வருவதுமாக இருந்தார் ஒரு நீல் நாள் ஒரு  விபத்து நேர்ந்தது அதனால் அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது 

அதனால் அவர் நடக்க முடியாமல் போனதுசில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அவர் தனது வேலைக்கு திரும்பினார் சரியாக நடக்க முடியாமல் போகவே ஒரு கழுதையை வாங்கினார் அதனை தனது போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொண்டார் இது  பல  நாட்கள்  தொடர்ந்தன சில நாட்கள் கிழக்கு நோக்கி பயணிப்பார் சில நாட்கள் மேற்கு நோக்கி  பயணிப்பார் சிலநாள் வடக்கு தெற்க்கு  என்று  அவரது பயணம் ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்தது மக்கள்   பாவம்  யார் பெத்த பிள்ளையோ இப்படி பையித்தியம் என்று இவனை  பார்த்து பரிதாப பட்டார்கள்
ஒரு முறை வணிகன் செல்லும் பொழுது வணிகனை ஒருவன் நிறுத்தி  கேட்டான் ஏம்ப்பா என்ன இது ஒருநாள்  கிழக்கா போரஒருநாள்  மேற்கா போற  ஒருநாள் வேகமா போற ஒருநாள் சீக்கிரமா வந்துட்ற ஒருநாள் வரவேமாட்டேங்கிற என்ன பா  என்று கேட்டான் முன்ன மாதிரி  இல்லிங்க இப்ப இந்த கழுதையோட உதவி தேவை படுது நான் போக சொல்ற எடுத்துக்கு போக சொன்னேன் இந்த வழியா போக சொன்னேன்  என்றான் வணிகன் அப்பறம் என்ன ஆச்சு என்று கேட்டான் அவன்  என்ன பண்றது பொழப்பும் நடக்கணும் கழுதைக்கு சொல்லி புரியவைக்க முடியாது 
கழுதையோட போராட என்னால முடியாது அதனால நான் மாறிக்கிட்டேன்   கழுதை போற போக்குல நான்  போறேன்  அது கிழக்கால போனா அந்த  பக்கம் இருக்குற வேலையெல்லாம் முடிக்கிறேன் அது மேற்கால போனா அந்தப்பக்கம் இருக்குற வேலைய முடிச்சிக்கிறேன் இப்ப கழுதை எனக்கு பிரச்சனை இல்ல  வாழ்க்கை நிம்மதியா இருக்கு என்றான் வணிகன் சகோதர சகோதரிகளே  வாழ்க்கையும் இப்படித்தான் அலுவலகத்தில் சமுதாயகத்தில் ஒன்று அல்லது இரண்டு கழுதைகளாவது அவசியம் இருக்கும் கழுதையோடு போராடுவது கடினம் கழுதைக்கு சொல்லி புரியவைப்பதும் கடினம் கழுதை போகும் போக்கில் .....எனக்கு எதுக்கு 

Friday, December 3, 2021

 

டக்ளு மஹாராஜா உலகளாவிய அகில உலக மஹாராஜா என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நல்லவர்ர்ர்ர்ர்ர்ர் வல்லவர்ர்ர்ர்ர்ர் நான்கில் ஒன்றுகூட அறியாவிட்டாலும் அனைத்தும் தெரிந்தது போலவே நடிப்பதில் வில்லாளி அவருக்கு எதை யாரிடம் கேட்க வேண்டும் என்ற 

விவஸ்தை கிடையாது. விவஸ்தை என்றால் எந்த கடையில் எத்தனை கிலோ கிடைக்கும் என்று கேட்பார் இடம், பொருள், ஏவல் என்று எதுவும் தெரியாமல் கண்ணில் பட்டோரிடம் கண்டதையும் கேட்டு விடுவார். உலகளாவிய அகிலஉலக சக்கரவர்த்தி டக்ளு மஹாராஜாவிற்கு ஈடு இணை உண்டோ இப்படி பலவிதமான அதிசய குணங்கள் கொண்டிருந்த நமது டக்ளு மஹாராஜா ஓர் முறை நகர்வலம் வந்தார்.வரும்பொழுது பாசிவழுக்கி கீழே விழுந்தார் முழங்காலில் அடிபட்டது  . உடனே மந்திரியை அழைத்தார். டக்ளு மஹாராஜா


“அமைச்சரே, எனது முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது. அப்படியும் இப்படியும் காலை அசைக்க முடிய வில்லை. என்ன செய்யலாம்?'' என்று ஆலோசனை கேட்டார்.

மந்திரி ஒரு கணம் தீவிரமாக யோசித்தார்.


“எந்த ஒரு விஷயமானாலும் அது சிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, நம் அரண்மனை குருவிடம் கேட்டுத்தானே செய்கிறோம். அதனால் அந்த முழங்கால் வலி பற்றியும் அவரிடம் கேட்கலாம். அவர் என்ன சொல்கிறாரோ? அதன்படி செய்வதே நல்லது,'' என்றார் அமைச்சர்.


அமைச்சர் சொல்வது சரியென டக்ளு மஹாராஜாவிற்கு பட்டது. அதனால் அவர், அரண்மனை குருவை அழைத்து வரும்படி தனது சேவகர்களுக்கு உத்தரவிட்டார். அரச குருவை அழைத்து வரச் சேவகர்கள் உடனே புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில் அரச குரு அங்கு வந்து சேர்ந்தார்.


“என்னை அழைத்த காரணம் என்னவோ, நான் தெரிந்து கொள்ளலாமா?'' எனக் குரு, அரசனைப் பார்த்து கேட்டார்.


“குருவே! எனது முழங்காலில் வலி உண்டாகியுள்ளது. அதைப் போக்க வழி ஏதேனும் சொல்லுங்கள்,'' என்று குருவைப் பார்த்து கேட்டார் டக்ளு மஹாராஜா.


“அரசே! அரண்மனை வைத்தியரைக் கேட்டால்தான் நல்ல வழி தெரியும். இருந்தாலும் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியைச் சொல்கிறேன். பொடுதலையை வச்சுக்கட்டினா முழங்கால் வலி நீங்கி விடும்,'' என்று கூறி விட்டு, குருநாதர் மஹாராஜாவிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்.


உடனே அரண்மனை வைத்தியரை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தான் மஹாராஜா. சேவகர்களும் அரண்மனை வைத்தியரின் வீட்டை நோக்கிப் படையெடுத்தனர்.


அரசனுக்கு முழங்கால் தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. அரண்மனை வைத்தியர் வரும் வரை வலியைத் தாங்க முடியாமல் 

துடித்தார்டக்ளுமஹாராஜா. அப்போது அங்கே பண்டிதன் ஒருவன் வந்தான்.


“குருநாதர் சொன்னபடி பொடுதலை வைத்துக் கட்ட வேண்டும்!'' என்று அவரிடம் கேட்டான் அரசன்.


அந்த பண்டிதனுக்குத் தமிழே அரைகுறை, வைத்தியம் என்றால் என்னவென்றே தெரியாது.
ஆனாலும் முழங்கால் வலியை பற்றி ஒருமணிநேரம் சொற்பொழிவு ஆற்றினார் பின்னர் "பொடுதலை' என்றவுடன் தனது கையில் இருந்த அகராதியைப் பிரித்து பொடுதலைக்குப் பொருள் கண்டறிந்தார்.


பின்னர், பண்டிதன் அரசனைப் பார்த்து, “அரசே! பொடுதலை என்றால் முடியில்லாத தலை, என அகராதியில் குறிப்பிடப் பட்டுள்ளது,'' என்று கூறினான்.


பண்டிதன் கூறியதைக் கேட்ட  உலகளாவிய அகில உலக டக்ளு மஹாராஜா உடனே காவலர்களை அழைத்து, “யாராவது தலையில் முடியில்லாமல் சென்றால் உடனே 

பிடித்துக் கொண்டு வாருங்கள்,'' என ஆணை பிறப்பித்தார்.


அரசனின் ஆணையைச் சிரமேற்கொண்டு காவலர்கள் சாலையில் சுற்றும் முற்றும் பார்த்தனர். அப்போது அந்த வழியாக மொட்டைத் தலையன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். உடனே காவலர்கள் அவனைப் பிடித்துச் சென்று அரசனின் முன் நிறுத்தினர்.


அரசனும், “சரி....சரி.... உடனே நம் குருநாதர் சொன்னபடி செய்யுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.


வந்திருந்த மொட்டைத்தலை ஆசாமிக்கு எதுவுமே விளங்கவில்லை. "குருநாதர் என்ன சொன்னார்? அரசன் நம்மைப் பிடித்து வரும்படி ஏன் கட்டளையிட்டார்? நம்மை என்ன செய்யப் போகிறார்கள்?' என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் மொட்டைத் தலையனின் உள்ளத்தில் எழுந்து அவனைக் குழப்பம் அடையச் செய்தன.


“உம்... சீக்கிரம் அவன் தலையை எடுத்துக் கொண்டு வாருங்கள்,'' என்று அரசர் கோபமாகக் கூறினான். மகாராஜாவின் ஆணையை கேட்டவுடன் காவலாளிகள் இருவர் மொட்டை தலையனையும் மொட்டை தலையையும் பிடித்து கொண்டனர் .மொட்டைத்தலையன் மரண பீதியுடன் காணப்பட்டான் மற்றொரு காவலாளி ஒருவன் ஒரு உலக்கையுடன் ஓடி வந்தான் அதனை பார்த்தவுடன் அந்த மொட்டை தலையன் விடுங்கடா விடுங்கடா விடுங்கடா விடுங்கடா என்று அலறினான் உலக்கை கொண்டு தலையில் ஓங்கி ஒரு அடி அடிக்க போகும் நேரத்தில் நிறுத்துங்கள் என்று ஒரு குரல் திரும்பி பார்த்தால் நமது அரண்மனை வைத்தியர் அப்போது  மருந்துடன் அங்கே வந்துவிட்டார். அரசனின் காலுக்கு மருந்தை வைத்து நன்றாக கட்டிவிட்டார்.


பிறகு அரசனிடம் “அரசே! இந்த மொட்டைத் தலையனின் தலையை தலையை உலக்கையால் அடிக்க சென்றார்கள்?'' என்று கேட்டார் வைத்தியர்.


“வைத்தியரே, உங்களை அழைத்து வரும்படி காவலர்களை அனுப்புவதற்கு முன், அரண்மனை குருநாதரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் பொடுதலை வச்சுக் கட்டினா முழங்கால் வலி சரியாகப் போய்விடும் என்று கூறினார். மேலும், எதற்கும் வைத்தியரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என்று குருநாதர் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அதன் பிறகுதான் உங்களுக்கு ஆள் அனுப்பினேன். நீங்கள் வருவதற்குச் சற்று தாமதம் ஆனதால் என்ன செய்வதென்று யோசனை செய்தேன்,'' என்று கூறி அரசன் தன் பேச்சைப் பாதியில் நிறுத்தினான்.


“அப்புறம் என்ன நடந்தது அரசே?'' என்று கேட்டார் வைத்தியர்.


“அப்புறம்... அங்கிருந்த அரைகுறைப் பண்டிதனிடம், "பொடுதலை' என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் தனது கையில் இருந்த அகராதியைப் பார்த்து, அரசே, பொடுதலை என்றால் முடியில்லாத தலை என்று அர்த்தம் என கூறினான். அவன் கூறியபடியே ஒரு மொட்டைத் தலையனைக் கண்டுபிடித்து அவனது தலையை வெட்டி, அதனை எனது முழங்காலில் கட்டினால் முழங்கால் வலி போய்விடும் என்று எண்ணி இவ்வாறு செய்தேன்,'' என்று விளக்கமாகக் கூறினான் அரசன்.


அரசன் இவ்வாறு கூறியதைக் கேட்ட வைத்தியர் கலகலவெனச் சிரித்தார்.
“வைத்தியரே, ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசன்.


“அரசே! பொடுதலை என்றால் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை இலை. அதை நசுக்கி முழங்காலில் வைத்துக் கட்டினால் வலி நீங்கிவிடும்,'' என்று கூறினார் வைத்தியர்.


இதைக் கேட்ட அரசன் பேந்தப் பேந்த விழித்தான். ஆனால், மொட்டைத் தலையனோ வைத்தியரைப் பார்த்து, “ஐயா, சரியான நேரத்தில் வந்து என் உயிரை காப்பாற்றினீர்கள். நீங்கள் மட்டும் வரவில்லை என்றால், இந்நேரம் என் தலையை வெட்டி, கசக்கி அரசனின் முழங்காலில் வைத்துக் கட்டியிருப்பார்கள். நல்லவேளை, என் உயிர் தப்பியது,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

 

 

வீஷன் என்று ஒரு குருவி இருந்தது.அந்த​ குருவிக்கு  சிறு குருவிக்கு ஒருநாள் ஒரு அழகிய கனவு வந்தது.கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.வண்ண வண்ண விளக்குகள்,அழகான நதிகள்,மரங்கள், அழகான மலைகள் ஜில்லென்று வீஸும் காற்று,இயந்திரங்கள் மற்றும் இயந்திரகதிர்வீச்சுகள்  இல்லாமல் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்றுஅந்த அற்புத உலகம் மயக்கியது.எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.ஆனால்போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.அது பறந்து போகும் போதுஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன?அவரிடம் குருவி வழி கேட்டது.“எனக்கு முழு விபரம் தெரியாது.தெரிந்த வரை சொல்கிறேன்.அதற்கு விலையாக

நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது.குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.இன்னொரு சிறகுதானே,தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.இப்படியே அந்தக் குருவி,அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.அவர்களும் வழி சொல்லிவிட்டுகுருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில்

வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக,அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......

இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்குஆனந்தம் தாங்கவில்லை.ஆனால்,இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை.ஐயோ,என் உடம்பெல்லாம் கனக்கிறதே.

கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும்

அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இந்த குருவியின் நிலைமைதான் நம்மில் பலருக்கும்

 மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக

இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.

அப்படித்தான் அப்பொழுதுதான் நடக்கவேண்டும் என்று இருந்தால் அதை யாரால் மாற்ற இயலும் இது இல்லையே இப்படி நடக்கவில்லையே என்பதை விட இதாவது இருக்கின்றது இப்படியாவது நடக்கின்றதே என்று நினைப்போமே வருவது தெரியாது போனது திரும்பாது இருப்பதே நிஜம் சரிதானே  

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...